பராஷா நிட்ஸாவீம்-வய்யேலெக்: வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் – பாவம், மனந்திரும்புதல் மற்றும் ஷப்பாத் ஷுவாவில் கடவுளின் மகிமை

நிட்ஸாவீம் (நீங்கள் நிற்கிறீர்கள்) נִצָּבִים  வய்யேலெக் (மேலும் அவர் சென்றார்)וַיֵּלֶךְ 

 உபாகமம் 29:9(10)–31:30; ஏசாயா 61:10–63:9; லூக்கா 24:1–12

நிட்ஸாவீம் – வய்யேலெக், இந்த வார தோரா ஆய்வில், கடவுளின் வார்த்தையின் இரட்டை பகுதியை இரண்டு பராஷோட் (வேதத்தின் பகுதிகள்) ஒன்றாக இணைத்து ஆசீர்வதிக்கப்படுகிறோம். முதலாவது, நிட்ஸாவீம் இந்த பராஷாத்தில், கடவுள் தனது வாழ்க்கை முறையையும் ஆசீர்வாதங்களையும் அல்லது புற இனமக்களின்  மரணம் மற்றும் சாபங்களைத் தேர்வு செய்ய மக்களை எதிர்கொள்கிறார்.

கடந்த வாரம், பராஷா கீ தாவோ (நீங்கள் நுழையும் போது) மோஷே மக்களிடம் தேசம் அமையப்பெற்று 40 வருடங்கள் ஆன பிறகும், அவர்களின் வனாந்தரப் பயணம் முழுவதும் அவர்களுக்கு, அடோனாய் செய்த அனைத்தையும் “புரிந்துகொள்ளும் உள்ளத்தையும், காண்கின்ற கண்களையும், கேட்கின்ற செவிகளையும் இந்நாள் வரை ஆண்டவர் உங்களுக்குத் தரவில்லை.” என்று கூறினார். (உபாகமம் 29:2-4)

நல்லதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்

பராஷா நிட்ஸாவீமில், கடவுள் யூத மக்களின் முன் இரண்டு எதிரெதிரான தேர்வுகளை வைக்கிறார்: வாழ்க்கை மற்றும் நல்லது, அல்லது இறப்பு மற்றும் தீமை.

ஒரு சிறந்த தந்தை தனது மகன் அல்லது மகளுக்குச் சிறந்த முடிவை எடுக்க அறிவுறுத்துவது போல், கடவுள் தனது குழந்தைகளை வாழ்க்கையைத் தேர்வு செய்யுமாறு வேண்டுகிறார்.

“உன் மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உன்னுடைய வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள். ” (உபாகமம் 30:19)

இந்த வசனம் தோராவின் நோக்கம் குறித்த நம்பமுடியாத நுண்ணறிவை வழங்குகிறது.

கடவுள் நமக்கு ஒரு வழிகாட்டியாகத் திருமறையைக் கொடுத்தார், அதனால் நல்லது எது கெட்டது என்பதை நாம் அறிவோம்; ஆயியென்றும்கூட, நாம் ஒவ்வொருவரும் கடவுளின் வார்த்தையின்படி நல்லதை ஏற்றுக்கொண்டு தீமையை நிராகரிக்க வேண்டும் – அல்லது நம் இதயத்தின் கட்டளைகளின்படி மற்றும் தற்போதைய கலாச்சார முன்னோக்கு அல்லது உலகக் கண்ணோட்டம் படி  வாழ்வது.

இதுவே கடவுள் மனிதக்குலத்திற்கு அளித்த ‘தன் விருப்பத்தின்’ கருத்து.

யூத வர்ணனையாளர், ராஷி, வாய்வழி பாரம்பரியத்தில் (நித்தா நூலில்) ஒரு கதையை அல்லது மிட்ராஷை மேற்கோள் காட்டுகிறார். குழந்தை வலிமையாகவோ அல்லது பலவீனமாகவோ, புத்திசாலியாகவோ அல்லது முட்டாளாகவோ வளருமா என்று கடவுளிடம் கேட்கும் தேவதூதரைப் பற்றியது.

அந்தத் தேவதூதர் கடவுளை ஒருபோதும், குழந்தை ஒரு பொல்லாதவனாகவோ அல்லது நீதிமானாகவோ ஆகிவிடுவானா கேட்க மாட்டார், ஏனென்றால் கடவுள் ஒருவரின் வாழ்க்கையின் சூழ்நிலைகளைத் தீர்மானிக்கலாம் ஆனால் நல்ல பாதையை அல்லது தீயப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் முடிவு மனிதனின் சொந்த விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது.   

துன்பத்தில் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நம் வாழ்க்கையைப் பாதிக்கும் எல்லாச் சூழ்நிலைகளையும் கட்டுப்படுத்த இயலாது என்றாலும், நாம் அவர்களுக்கு எப்படி நடந்துகொள்வோம் என்பதை நாம் தீர்மானிக்க முடியும்.

எல்லாம் நன்றாக இருக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பது அல்லது நன்றாக இருப்பது எளிதாக இருக்கலாம், ஆனால் நல்ல நேரங்களுக்கு மத்தியிலும் நாம் மகிழ்ச்சியாகவோ அல்லது நன்றாகவோ இருப்போம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அதேபோல், சோகமான சூழ்நிலைகள் நம் உறுதியான அடித்தளத்திலிருந்து நம்மை அசைக்க வேண்டியதில்லை, ஏனெனில் அதனால் நாம் கடவுள் மீதான நம்பிக்கையை இழந்து துயரமாகவும் கசப்பானவராகவும் ஆகிவிடுவோம்.

மேலும் ஒரு வயதான பெண்ணின் கதை இது, அவருடைய மகன் புற்றுநோயால் இறந்துவிட்டார், மூன்று சிறிய குழந்தைகளுடன் ஓர் அழகான இளம் மனைவியை விட்டுவிட்டார். “அவர்கள் வைதீகமான யூதக் குடும்பம், மற்றும் அவர்கள் எப்படி ஒரு பயங்கரமான சோகத்திற்கு எதிர்வினையாற்றுவார்கள் என்று நான் ஆச்சரியப்பட்டேன்,” என்று அவர் கூறினார். அப்போதுதான் அந்த இளம் மனைவி தொலைப்பேசியில் தன் தோழியிடம் பேசுவதை நான் கேட்டேன். அவளுடைய வார்த்தைகளில் கடவுளுக்கு மரியாதை மட்டுமே நிறைந்திருந்தன, அடிக்கடி Bless The Name / ברוך השם / பாரூக் ஹஷ்ஷேம்.

அவரது உடல்நலம், அவருடைய குழந்தைகள் மற்றும் அவரது வாழ்வாதாரத்தை இழந்த பிறகு. ” ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!” என்று யோபு எப்படிச் சொன்னார் என்பதை இது எனக்கு நினைவூட்டியது.

ஒரு பிரபல உளவியலாளரும், ஹோலோகாஸ்ட்டில்(Holocaust) இருந்து தப்பியவருமான விக்டர் ஃப்ராங்க்ல், நாஜி சித்திரவதை முகாம்களின் கொடூரமான சூழ்நிலைகளில் சுதந்திரமான விருப்பத்தைப் பயன்படுத்துவதற்கான மனிதனின் திறனைப் பற்றி Man’s Search for Meaning புத்தகத்தில் எழுதினார்.

இதுபோன்ற மோசமான சூழ்நிலைகளில் ஒரு நபர் கனிவான, தார்மீக, மனிதாபிமான வழிகளில் செயல்பட இயலாது என்று நாம் எதிர்பார்க்கலாம் என்றாலும், ஃப்ராங்க்ல் தனது புத்தகத்தில் இது அவ்வாறு இல்லை; அவர் வீரர்களின் பல உதாரணங்களைக் கவனித்தார்.

ஃப்ராங்க்ல் எழுதினார், “[இந்த மனிதர்கள்] எல்லாவற்றையும் ஒரு மனிதனிடமிருந்து பறிக்க முடியும் என்பதற்குப் போதுமான சான்றை வழங்குகிறார்கள் ஆனால் ஒன்று: மனிதச் சுதந்திரத்தின் கடைசி – எந்தச் சூழ்நிலையிலும் ஒருவரின் அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பது, ஒருவரின் சொந்த வழியைத் தேர்ந்தெடுப்பது …” (பக்கம் 86-88)

தீவிர உடல் மற்றும் உணர்ச்சி, மன அழுத்தத்தில் கூட, நாம் நம் நடத்தையை – நேசிக்க மன்னிக்க – அல்லது வெறுப்பு மற்றும் கசப்பில் இருக்கத் தேர்வு செய்யலாம்.

நம்மில் பெரும்பாலோர் இதுபோன்ற மிருகத்தனமான நிலைமைகளை ஒருபோதும் தாங்க வேண்டியதில்லை, ஆனால் நம் ஒவ்வொருவருக்கும் நம் வாழ்நாள் முழுவதும் தேர்வுகள் வழங்கப்படும்.

தைரியமாக, சுயநலமற்றவராக, உண்மையாக இருக்க வேண்டுமா இல்லையா என்பதை நாம் தேர்வு செய்ய வேண்டும்; அல்லது பயத்திற்கு அடிபணிந்து, நம்முடைய சொந்த வழியில் போராட, குறிப்பாக மனிதக் கௌரவத்தை இழக்கிறோம், அதிலும் கடுமையான துன்பங்களின் போது.
நம் வாழ்நாள் முழுவதும் நமது ஒழுக்கமும் நெறிமுறைகளும் பல்வேறு நேரங்களில் சோதிக்கப்படும். நாஜிக்கள் சிலர் போர்க்குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதைப் போல, நாம் வாதாட முடியாது, அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொண்டனர், “எனக்கு வேறு வழியில்லை …. நான் கட்டளைகளைப் பின்பற்றினேன். “

உண்மை என்னவென்றால், தோராவின் மதிப்புகளுக்கு ஏற்ப செயல்படும் திறன் அல்லது அழிவுக்கு வழிவகுக்கும் அந்த பரந்த பாதையில் நடப்பதற்கான திறன் நமக்கு எப்போதும் உண்டு.

கடவுளிடம் திரும்புவதற்கான சுதந்திரம்

ஞாயிற்றுக்கிழமை, Days of Awe (யாமிம் நோரைம்) என்ற பயபக்தியான பத்து நாட்கள் ரோஷ் ஹஷானாவில் (யூத நாட்காட்டி புத்தாண்டு 5785) தொடங்குகிறது. அது யோம் கிப்பூர் (பாவ நிவாரண நாள்) உடன் முடிவடைகிறது.

இந்தப் பத்து நாட்களும் நம்மைச் சுயபரிசோதனை செய்யும் காலமாகும், அந்தச் சமயத்தில் நாம் நம் பாவங்களை மன்னிக்க ஜெபிக்கிறோம் – மேலும் ஆண்டு முழுவதும் நாம் பாவம் செய்தவர்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்.

மனந்திரும்புதல் ஒவ்வொரு நபரையும் கடவுளிடம் திரும்பக் கொண்டுவருவதாகும்.

இயேஷூஅவின் நாட்களில், இலையுதிர் காலப் பண்டிகைகளுக்கான இந்தப் பருவத்தில் தயாராகி, மக்கள் Jordan / יַּרְדֵּן / இயர்டேன் ஆற்றில் உள்ள John/ יוֹחָנָן‎ / யோஹானான் (யோவான் ஸ்நானகன்) இடம் மிக்வாவில் மூழ்கி (ஞானஸ்நானம் பெற்றார்கள்). அங்கு, அவர்கள் மனந்திரும்புதலை நிரூபிக்கும் கனிகளைக் கொண்டவர்களாக மாற வேண்டும் என்று அவர் அவர்களை எச்சரித்தார்.

லூக்கா 3:7-8

மனந்திரும்புதலுக்கான எபிரேய வார்த்தை, Teshuva / תְּשׁוּבָה / தெஷுவா.
இது shuv / שׁוּב / ஷுவ்  என்ற மூலத்திலிருந்து வருகிறது, இதன் பொருள் ‘திரும்புதல்’ ஆகும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாவம், தீமை மற்றும் மரணத்தின் பாதையை நாம் தேர்ந்தெடுக்கும்போது, ​​அது நம்மைக் கடவுளின் முன்னிலையிலிருந்து வெளியேற்றுகிறது. நாம் மனந்திரும்பும்போது, ​​நாம் கடவுளின் முன்னிலையில் மீண்டும் வருகிறோம்.

இஸ்ரயேலர்கள் மனந்திரும்பாத பாவத்தின் விளைவாகக் கடவுளிடமிருந்து விலகும் தனிப்பட்ட பிரிவோடு அதிகமாக இருக்கும் என்றும், அது தேசிய நாடுகடத்தலாக இருக்கும் என்பதை இந்த பராஷாவில் நாம் கற்றுக்கொள்கிறோம்.

இஸ்ரயேல் நாடுகடத்தல் என்பது கதையின் முடிவு அல்ல.

இந்த பராஷாவில், கடவுள் இஸ்ரேலியர்களிடம் பாவத்தின் காரணமாக நாடுகடத்தப்பட்டவர்கள், அவரிடம் திரும்பியவுடன் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்திற்கு கூட்டிச் செல்லப்படுவார்கள் என்று கூறுகிறார். அவர் அவர்களைச் சேகரித்து அவர்களுடைய சொந்த நிலத்திற்குத் திரும்பிய பிறகு, அவர் தனது மக்களான இஸ்ரயேலை ஆசீர்வதித்து வளப்படுத்துவார். உபாகமம் 30:2-3

இருப்பினும், இன்று பலர் கடவுளுக்குக் கீழ்ப்படிவது அல்லது தோரா வைக் கடைப்பிடிப்பது மிகவும் கடினம் என்று நம்புகிறார்கள்.

கீழ்ப்படிதலில் நடப்பது நமக்கு மிகவும் கடினம் அல்ல என்று கடவுள் வாக்குறுதி அளிக்கிறார் என்பதை இந்த பராஷா நமக்கு நினைவூட்டுகிது.

உபாகமம் 30:11-14

மேலும், கீழ்ப்படிதலுக்காகப் பல வெகுமதிகள் உள்ளன.

இந்த வெகுமதிகள் ஓலம் ஹபா (வரப்போகும் உலகம்) என்று குறைக்கப்படவில்லை, ஆனால் இங்கே மற்றும் இப்பொழுது  நம் வாழ்விற்காகவும் உள்ளன.

நாம் சொர்க்கத்திற்கு வரும்போது அவை ஆன்மீக வெகுமதிகள் மட்டுமல்ல; அவை நீண்ட ஆயுள், செழிப்பு மற்றும் உடல், பொருள் மற்றும் உணர்ச்சிகளின் வெகுமதிகளாகும்.

ஆயினும், தீமை தொடர்கிறது, கீழ்ப்படிந்தவர்கள் கூட சில நேரங்களில் எதிரிகளின் அடக்குமுறை மற்றும் தாக்குதல்களுக்கும் வீழ்ச்சியடைந்த உலகத்திற்கும் இரையாகிறார்கள் என்பதை நாம் அறிவோம். இயேசு கூட “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவற்றை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். ” – யோவான் 16:33

பிரச்சனை உள்ளவர்கள் பயத்திற்கு அடிபணிய வேண்டியதில்லை.

துன்பத்தின் மத்தியிலும் நாம் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்பதை ஃபிராங்க்ல் நமக்கு நினைவூட்டுகையில், எதிரி பல நல்ல விஷயங்களை நம்மிடமிருந்து பறிக்க முடியாது என்று திருமறை சொல்கிறது: நல்லதைத் தேர்ந்தெடுப்பதற்கான நமது சுதந்திரம்; இஸ்ரயேலின் கடவுள் மீது எங்கள் நம்பிக்கை; ஆன்மீக அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்த நம் மேசியாவான இயேஷூவா மீதான நம்பிக்கை.

எந்த ஒரு தருணத்திலும் எவ்வளவு இருண்ட விஷயங்கள் இருந்தாலும், நாம் இந்தப் பூமியில் இருக்கும்போது கடவுள் அவருடைய நன்மை மற்றும் கருணைக்கான ஆதாரங்களை நமக்குக் காண்பிப்பார்.

டாவீட் ராஜா சொன்னது போல், “நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்திருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.” – சங்கீதம் 27:13

வாழ்வைத் தேர்ந்தெடுப்பது கடவுளை நம் இதயம், மனம், ஆன்மா மற்றும் வலிமையுடன் நேசிப்பது, அவருடைய ரூவாஹ் ஹகொடேஷின் (பரிசுத்த ஆவி) குரலைக் கேட்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பது ஆகும். அவ்வாறு செய்வது நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த தேர்வாகும் – ஏனென்றால் இது நம் வாழ்க்கை!

கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும் படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான். – உபாகமம் 30:20

வய்யேலெக், தோரா பகுதியில், மோஷே யோஷுவாவை தலைமைத்துவத்துக்கு நகர்த்தி தோராவை வழங்குகிறார். 

வய்யேலெக் ஆண்டின் மிகக் குறுகிய தோரா வாசிப்பு, இது ஓர் அத்தியாயத்தை மட்டுமே கொண்டுள்ளது. ரோஷ் ஹஷானா (யோம் டெரூவா)க்குப் பின்பும் யோம் கிப்பூர்க்குப் (பாவ நிவாரண நாள்) பிறகு வரும் இந்த குறிப்பிட்ட ஷப்பாத்தின் வாசிப்பு, பயபக்தியான பத்து நாட்களில் (யமிம் நோரைம்) நாம் இறைவனைத் தேட வேண்டும் நம்முடைய பாவங்களுக்காக நேர்மையான Teshuva / תְּשׁוּבָה / டெஷுவா. மனந்திரும்புதலை நாட வேண்டும்.

இந்தச் சிறப்பு ஷப்பாத், ஷப்பாத் ஷுவா (திரும்பும் ஷப்பாத்) என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் ஓசியா புத்தகத்திலிருந்து சிறப்புத் தீர்க்கதரிசன வாசிப்பு Shuvah Israel / שׁוּבָה יִשְׂרָאֵל /  ஷுவா இஸ்ரயேல் – இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா என்று தொடங்குகிறது.

கடவுளின் மக்கள் தங்கள் பாவங்களிலிருந்தும் கலகங்களிலிருந்தும் விலகி கடவுளிடம் திரும்ப (ஷுவா) திரும்ப அழைப்பதால் இது ஷப்பாத் டெஷுவா (மனந்திரும்புதலின் ஷப்பாத்) என்றும் அழைக்கப்படுகிறது.

வாரிசு திட்டமிடல்: மோஷே மற்றும் யோசுவா

பின்னர் மோஷே சென்று இந்த வார்த்தைகளை இஸ்ரயேல் அனைவரிடமும் பேசினார். அவர் சொன்னது: “இன்று எனக்கு வயது நூற்று இருபது. இனி என்னால் நடமாட இயலாது. மேலும், ‘நீ யோர்தானைக் கடக்க மாட்டாய்’ என்று ஆண்டவர் எனக்குக் கூறியுள்ளார்.” – உபாகமம் 31:1-2

இந்த பராஷாவில், மோஷே தனது உடனடி மரணத்தை எதிர்கொள்கிறார். 120 வயதில், அவர் தனது தலைமையின்றி எதிர்காலத்திற்காகத் தனது மக்களைத் தயார் செய்கிறார்.

Jordan / יַּרְדֵּן / இயர்டேன் ஆற்றின் குறுக்கே இஸ்ரயேலின் குழந்தைகளை வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது என்று மோஷேக்குத் தெரியும்.

மோஷே மக்களுடன் செல்லவில்லை என்றாலும், கடவுள் அவர்களுடன் சென்று அவர்களுக்கு எதிரிகளை எதிர்த்து வெற்றி கொடுப்பார் என்று அவர் உறுதியளிக்கிறார்.

மோஷே மூலம் இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் ஒரு வார்த்தையையும் கொடுக்கிறார்: “வலிமையாகவும் தைரியமாகவும் இருங்கள்.”

அவர்களுக்கு ஏன் இந்த ஊக்கம் தேவைப்பட்டது?

வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்தில் அவர்கள் புதிய எதிரிகளையும் சவால்களையும் எதிர்கொள்வார்கள் என்பதால் அவர்கள் வனாந்தரத்தில் இவற்றைச் சந்தித்ததில்லை. பரலோகத்திலிருந்து ஒவ்வொரு நாளும் மன்னா மழை பெய்யாது ஆதலால் நிலத்தை எப்படி பண்படுத்த வேண்டும் என்பதையும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஷப்பாத் ஷுவா உண்மையில் இரண்டு சிறப்பு ஹஃப்டாரா வாசிப்புகளைக் கொண்டுள்ளது. ஓசியா 14: 1 (2) –9 (10) இதயப்பூர்வமான மனந்திரும்புதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது மற்றும் மீகா 7:18-20 கடவுளின் கருணையைப் போற்றுகிறது.   

இருப்பினும், மோஷே மக்களை மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் தலைவராக இல்லாமல் விட்டுவிடப் போவதில்லை. தலைமைப் பொறுப்பை ஏற்க அவர் யோசுவாவை தனது வாரிசாக நியமித்தார்.

பின்னர், மோசே யோசுவாவை வரவழைத்து, இஸ்ரயேலர் அனைவர் முன்னிலையிலும் அவரிடம் கூறியது: வலிமை பெறு; துணிவுகொள்; இவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், இந்த மக்களோடு நீ செல்லவேண்டும். அதை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்யவேண்டும். – உபாகமம் 31:7

மோஷே நமக்கு ஒரு முக்கியமான உதாரணத்தை கற்றுத் தருகிறார். மரியாதை  மற்றும் கௌரவத்துடன் தனது முக்கியத்துவ நிலையை விட்டு வெளியேறத் தெரிந்தவர் என்பதைக் காட்டுகிறார். பதவி விலகும் நேரம் எப்போது என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது .

அவர் அடுத்த தலைமுறைக்கு எரிச்சலை வெளிப்படுத்தவோ அல்லது உணர்வுகளைக் காயப்படுத்தவோ இல்லாமல், “முழு இஸ்ரயேலின் பார்வையில்” தனது இடத்தைப் பிடிப்பவர் மீது ஆசீர்வாதம், ஊக்கம் மற்றும் உறுதிப்பாட்டை வழங்கினார்.

இந்தத் தலைமைப் பாத்திரத்திற்காக எஃப்ராயிம் கோத்திரத்தைச் சேர்ந்த யோசுவா பென் நூன் தயார்ப்படுத்தப்பட்டார்.

அவர் அமலேக்கிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் போது திறமையான இராணுவத் தலைவராக இருந்தார் (யாத்திராகமம் 17: 8-13), மற்றும் மோஷேயின் விசுவாசமான சீடர். மோஷே சினாய் மலையிலிருந்து இறங்குவதற்காக 40 நாட்கள் பொறுமையாகக் காத்திருந்த பிறகு அவர்தான் முதலில் வாழ்த்தினார் (யாத்திராகமம் 32:15-17).

மோஷே யோசுவாவைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்ததாகத் தெரிகிறது – அவருடைய இரண்டு மகன்களுக்கும் (கேர்ஷொம் மற்றும் எலீயெசெர்) பதிலாக- யோசுவா கடவுளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இஸ்ரயேல் மக்களை வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்திற்கு வெற்றிகரமாக வழிநடத்துவார் என்று நம்பினார்.

இதன் விளைவாக, யோசுவா எரிகோவையும் இறுதியில் கானானின் மற்ற பகுதிகளையும் கைப்பற்றினார்.   

நாமும் ஒரு புதிய முயற்சியில் இறங்கும்போது, ஒவ்வொரு சவாலையும் சமாளிக்கவும், ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்யவும் கடவுள் நம்மோடு இருப்பார் என்று நம்பும் வலிமையும் தைரியமும் வேண்டும்.

சங்கீதம் 60:12

மேலும், நம் வாழ்வில் மக்கள் வந்து போகலாம், ஆனால் கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடாத உண்மையுள்ளவர்.

திறமையான, வலிமையான, ஆன்மீகத் தலைவர்கள் கூட, மக்களைச் சார்ந்து நாம் வரலாம், ஆனால் இறுதியாக நாம்  — கடவுள் தான் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார் என்பதை நம்ப வேண்டும்.

சங்கீதம் 46: 1-2

வாரிசு திட்டமிடல் மற்றும் தோரா

இந்த பராஷாவில் வாரிசு என்பது தலைமையை மட்டும் சார்ந்ததல்ல. மக்களை எதிர்காலத்தில் கொண்டு வருவதற்குத் தேவையானதை மக்கள் வைத்திருப்பதை மோஷே உறுதி செய்தார்.

அவர் தோராவை எழுதினார் மற்றும் இஸ்ரயேலியர்களுக்கு ஒவ்வொரு ஏழு வருடங்களுக்கும் ஷெமிதா வருடத்தில், சுக்கோத் நேரத்தில் (கூடாரப் பண்டிகை) படிக்கும்படி கட்டளையிட்டார்.

மோஷே இந்த தோராவின் பாதுகாப்பை கோஹனிம் மற்றும் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து லேவியர்களின் கைகளிலும் ஒப்படைத்தார்.

இந்த வழியில், தோரா கற்பிக்கப்பட்டு, தலைமுறை தலைமுறையாகக் கொடுக்கப்பட வேண்டும், அவர்கள் இறைவனுக்குப் பயந்து அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். 

நம் குழந்தைகளுக்குக் கடவுளின் வார்த்தையைக் கற்பிக்கும் பொறுப்பும் நமக்கு உள்ளது – அவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கலாம், அதனால் தலைமுறையினருக்குக் கடவுளுக்குப் பயந்து அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

உபாகமம் 31:12-13

கட்டளை அடிப்படையில் நமது குழந்தைகளுக்கு தோராவை விடாமுயற்சியுடன் கற்பிக்கும் பொறுப்பு இன்றும் கூட, பெரும்பாலான யூத மக்களிடையே தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

உபாகமம் 6:4-7

கடவுள் மீதான நமது நம்பிக்கையை நம் குழந்தைகளுக்குக் கடத்துவது, திருச்சபை சேவைகளின் போது வாரத்திற்கு ஒரு முறை இளைஞர் ஊழிய ஆசிரியரின் வேலை அல்ல; இது நம் குழந்தைகளுக்கு முன்னால் நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலுடன் வாழும் வாழ்க்கை முறையாகவும், கடவுள் மற்றும் அவருடைய வார்த்தையைப் பற்றி நாள் முழுவதும் மற்றும் அன்றாடம் பேசுவதாகவும் உள்ளது.

பாவம், மனந்திரும்புதல் மற்றும் கடவுளின் மகிமை

இந்த பராஷாவில், கடவுள் தனது அனைத்து எச்சரிக்கைகளையும் மீறி, இஸ்ரயேல் மக்கள் வழிதவறிச் சென்று ஆன்மீக விபச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்பதை மற்ற கடவுள்களைத் தேடுவதன் மூலமும், வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்தில் தங்களைச் சுற்றியுள்ள பிறமதச் சிலைகளை வழிபடுவதன் மூலமும் அறிந்திருப்பதை நாம் உணர்ந்தோம்.

கர்த்தர் மோசேயை நோக்கி: நீ உன் பிதாக்களோடே படுத்துக்கொள்ளப்போகிறாய்; இந்த ஜனங்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தேவர்களைச் சோர மார்க்கமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடனே நான் பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள். அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதனால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேகத் தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்.

– உபாகமம் 31:16-17

இரண்டு முறை, கடவுள் தனது மக்களின் பாவங்களுக்காகத் தனது முகத்தை மறைப்பார் என்று கூறுகிறார். இந்த சொல் தெய்வீக ஆதாயத்தின் பற்றாக்குறையைக் குறிக்கவில்லை ஆனால் அதை மறைப்பதைக் குறிக்கிறது.

இன்றும் இதை நாம் பார்க்கலாம். கடவுள் இஸ்ரயேல் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கும் நிலையைப் பராமரிக்கிறார் – ஆனால் தந்தை இயேஷூவா ஹமாஷியாக் (இயேசு மேசியா) மூலம் வெளிப்படுத்தப்படுகிறார்.

என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் – யோவான் 14:9

இயேஷூவாவில், கடவுளை அவருடைய எல்லா மகிமையிலும் காண்கிறோம்:

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். – கொரிந்தியர் 4:6