பராஷா பெரேஷீத்: புதிய தொடக்கங்களின் பரிசு

பெரேஷீத் (துவக்கத்தில்) בְּרֵאשִׁית

ஆதியாகமம் 1:1–6:8; ஏசாயா 42:5–43:10; யோவான் 1:1–18

பெரேஷீத் – ஒரு நல்ல படைப்பு

பெரேஷீத் / בְּרֵאשִׁית பராஷா நம் உலகத்தை உருவாக்கிய வியத்தகு, பிரமிக்க வைக்கும் கதையுடன் ஆரம்பிக்கிறது. பெரேஷீத் בְּרֵאשִׁית புத்தகம் தமிழில், ஆதியாகமம் என்று அழைக்கப்படுகிறது. שִׂמְחַת תּוֹרָה / Simchat Torah / சிம்ஹத் தோராவுடன்(தோராவில் மகிழ்ச்சி) விருந்துகள் முடிந்ததும், ஒவ்வொரு ஆண்டும் நமக்கு வழங்கப்படும் அருமையான பரிசு இதுவே, நம்முடைய பராஷியோட் சுழற்சி (தோரா ஆய்வு பகுதிகள்) மீண்டும் (பெரேஷீத்) ஆரம்பத்திலிருந்து தொடங்கும்.

தோரா வாசிப்புகளின் வருடாந்திரச் சுழற்சியில் இந்த முதல் பராஷா மற்றும் திருமறையின் முதல் புத்தகம் ஆகிய இரண்டும் உரையின் முதல் தனித்துவமான வார்த்தையான பெரேஷீத் / בְּרֵאשִׁית என்பதிலிருந்து அவற்றின் பெயரை எடுத்துக்கொள்கின்றன, அதாவது “ஆரம்பத்தில்” என்று பொருள்.

31 வசனங்கள் மற்றும் 469 சொற்களில், கடவுள் எவ்வாறு குழப்பத்தையும் வெறுமையையும் (தோஹு வாவோஹு / תֹהוּ וָבֹהוּ) எடுத்துக்கொள்கிறார் மற்றும் ஒழுங்கு மற்றும் அழகின் நுட்பமான சமநிலையை உருவாக்குகிறார் என்பதை ஆதியாகமம் விவரிக்கிறது. Save

“பூமி அறியப்படாதது மற்றும் வெற்றிடமானது (தோஹு வாவோஹு / תֹהוּ וָבֹהוּ), ஆழத்தின் முகத்தில் இருள் இருந்தது, கடவுளின் ஆவி நீரின் மேற்பரப்பில் ஒளிர்ந்தது.” (ஆதியாகமம் 1:2)

பெரேஷீத் பராஷாவில், ரூஅக் எலோஹீம் / רוּחַ אֱלֹהִים / Ruach Elohim (Spirit of God) கடவுள் இருளிலிருந்து ஒளியையும், நிலத்திலிருந்து நிலத்தையும் பிரிப்பதால், தண்ணீருக்கு மேல் வட்டமிடுகிறார். அவர் தாவரங்களையும் உயிரினங்களையும் உருவாக்குகிறார் – கடலின் மீன் மற்றும் காற்றின் பறவைகள், அத்துடன் நில விலங்குகளையும் படைக்கிறார்.

அடோனாய் தான் உருவாக்கிய அனைத்தையும் பார்த்து அதை நன்று என்று அறிவிக்கிறார்; இருப்பினும், அவர் முடிக்கவில்லை.

படைப்பின் ஆறாவது மற்றும் இறுதி நாளில், கடவுள் முதல் மனிதனை – Adam /ஆடாம் / אָדָם பூமியின் தூசியிலிருந்து அடாமா / אדמה / Adamah வெளியே கொண்டு வருகிறார்.

“அப்பொழுது கர்த்தராகிய தேவன் மனிதனை (ஆடாமை) நிலத்தின் தூசியிலிருந்து (அடாமா) உருவாக்கி, மூக்கிலிருந்து ஜீவ சுவாசத்தைச் சுவாசித்தார்; மனிதன் உயிருள்ள ஆத்மாவானான்.” (ஆதியாகமம் 2:7)

ஆளுமை, உணர்ச்சிகள் மற்றும் ஆசைகள் கொண்ட மாம்சமும் இரத்தமும் உடைய ஆடாமை ஒரு “உயிருள்ள ஆத்மா” ஆக மாற்றக் கடவுளின் சுவாசம் தேவை என்பதைக் கவனியுங்கள் –

பூமியில் முதல் “மனிதன்” என்ற பெயரில் அடங்கியிருப்பது எபிரேய மூல வார்த்தை தாம் (דָם – இரத்தம்). இது தற்செயல் நிகழ்வு அல்ல, ஏனென்றால் உயிரானது இரத்தத்தில் இருக்கிறது என்று கடவுள் அடிக்கடி சொல்கிறார் (ஆதியாகமம் 9:4; உபாகமம் 12:23; லேவியராகமம் 17:11).

மனிதக்குலம் – ஆண், பெண் இருவருமே – கடவுளின் உருவத்திலும் ஒற்றுமையிலும் உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கவனியுங்கள்.

எபிரேயத்தில் பெட்செல்மோ / B’tzelmo –בְּצַלְמוֹ (அவரது உருவத்தில்) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். எபிரேய மூல வார்த்தையான செலெம் / צֶלֶם (படம்) நவீன எபிரேய மொழியில் புகைப்படம் எடுப்பது அல்லது புகைப்பட நகல் எடுப்பது என்ற பொருளில் பயன் படுத்தப்படுகிறது, மேலும் நமக்கும் நம் பரலோகப் பிதாவுக்கும் இடையே ஒரு திட்டவட்டமான குடும்ப ஒற்றுமை உள்ளது அதனைப் பின் வரும் வசனத்தில் அறியலாம்.

“மேலும் கடவுள் மனிதனை (ஆடாம்/אָדָם) தனது சொந்த உருவத்தில் பெட்ஸல்மோ / בְּצַלְמוֹ (அவரது உருவத்தில்), கடவுளின் சாயலில் (பெட்செலெம் எலோஹீம் B’tzelem Elohim – בְּצֶלֶם אֱלֹהִים) அவர்களைப் படைத்தார்; ஆண் (זָכָר– ஸாகார்) மற்றும் பெண் (נְקֵבָה – நெகேவா) அவர் அவர்களைப் படைத்தார்.” (ஆதியாகமம் 1:27)

கடவுளின் உருவத்தில்: படைப்பாற்றல்

பெரேஷீத் பராஷாவில், தூசியால் ஆன நமது தற்காலிகப் பாத்திரங்களில் நாம் கடவுளை ஒத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், நம்முடைய ஆத்மாவிலும் ஆவியிலும் அவரைப் போலவே இருக்கிறோம். படைப்பாற்றலுக்கான நமது திறன் மூலம் நாம் கடவுளை ஒத்திருக்கிறோம்.

பூமி மற்றும் உயிர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் கடவுள் மகிழ்ச்சியடைந்ததைப் போலவே, ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் உள்ளார்ந்த குணமாகப் படைப்பாற்றல் இருக்கிறது, இது கலை, எழுத்து மற்றும் இசை மட்டுமல்ல, வணிகம், பொறியியல், மூலோபாயச் சிந்தனையாகவும் வெளிப்படுகிறது.

ஆனால் கடவுள் எவ்வாறு பிரபஞ்சத்தை உருவாக்கினார்? வேதாகமம் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பதாகக் கூறுகிறது. அந்தக் காரணத்திற்காக, படைப்பின் ஒவ்வொரு செயலும் “கடவுள் சொன்னார்…” என்றே தொடங்குகிறது. (ஆதியாகமம் 1:3)

நாம் கடவுள் இல்லை என்றாலும், புதிய கால (New Age) சூழ்நிலையில் சிலர் கூறுவது போல், நம் வார்த்தைகளில் படைப்பு சக்தி நமக்கு வழங்கப்பட்டுள்ளது. மரணம் அல்லது வாழ்வு நேரும்படியாக நாவால் பேசமுடியும். (நீதிமொழிகள் 18:21)

இஸ்ரயேலர்கள் தங்கள் சொந்த வார்த்தைகளால் அறிவித்ததைக் கடவுள் அவ்வாறே ஆகட்டும் என்று சொல்லும்போது – அவர்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள் என்னும் பொருள் உள்ளபோது, வார்த்தைகளின் வன்மையை நாம் காண முடிகிறது. மக்கள் அவநம்பிக்கையையும் கீழ்ப்படியாமையும் வளர்த்து, தங்களுக்கு தாங்களே மரணம் மேற்கொள்ளப் பேசிக் கொண்டனர். அவர்களின் நம்பிக்கையற்ற வார்த்தைகளின் விளைவாக, முழு தலைமுறையும் வனாந்தரத்தில் அழிந்தது. (எண்ணாகமம் 14:28-29)

இதை மனதில் வைத்துக்கொண்டு, நம் வாயைக் கவனமாகக் காத்துக்கொண்டு, நம்முடைய வார்த்தைகளைக் கவனிப்போம் – ஏனென்றால் நம் வாழ்க்கையிலும், மற்றவர்களின் வாழ்க்கையிலும் நல்லவற்றை உருவாக்க அல்லது அழிவை ஏற்படுத்தும் சக்தி அவற்றுக்கு உண்டு. (நீதிமொழிகள் 15:4)

மேலும், விசுவாசத்தில் பேசப்படும் கடவுளுடைய வார்த்தை இருளில் ஒளியை உருவாக்கச் சக்திவாய்ந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது, மேலும் குழப்பத்திலிருந்தும் வெறுமையிலிருந்தும் ஒழுங்குபடுத்தித் தெளிவிக்கிறது.

ஆரம்பத்தில், கடவுளின் படைப்பில் உள்ள அனைத்தும் சரியாக வேலை செய்தன, அனைத்தும் சரியான அர்த்தத்தை அளித்தன. அவர் விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பு ஆகியவற்றைக் கொண்டு எல்லாவற்றையும் படைத்தார். 

ஆறு நாட்கள் உழைப்புஒரு நாள் ஓய்வு

ஆறு நாட்கள் சுறுசுறுப்பாக உருவாக்கிய பிறகு, கடவுள் ஏழாம் நாள் ஷப்பாத்தை நிறுவினார், இது உழைப்பை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கவும். புதுப்பிக்கப்பட்ட புத்துணர்ச்சியைப் பெற்றுக் கொள்ளவும் வேண்டிய நேரம்.

“ஏழாம் நாளில் கடவுள் தான் செய்த வேலையை முடித்தார், அவர் செய்த எல்லா வேலைகளிலிருந்தும் ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார். தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதைப் பரிசுத்தப்படுத்தினார், ஏனென்றால் தேவன் படைத்து உருவாக்கிய எல்லா வேலைகளிலிருந்தும் அவர் ஓய்வெடுத்தார்.” (ஆதியாகமம் 2:2-3)

இந்தப் புனித ஓய்வு நாள் மிகவும் முக்கியமானது, கடவுள் அதை அசெரெட் ஹாடெவாரீமில் (பத்துச் சொற்கள் அல்லது வார்த்தைகள்) (Ten Words or Commandments), சேர்த்து கல் பலகைகளில் எழுத உத்தரவிட்டார். (யாத்திராகமம் 20:8-11)

தனிமையின் சிக்கல்

“மேலும் கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்:‘ மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல; ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.” (ஆதியாகமம் 2:18)

அடோனாய் மனிதனை Garden of Eden / גַּן־עֵדֶן‎ /கான் ஏடெனில் வைத்தபோது, ஒரு மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என்று அறிவித்தார்.

ஓர் உதவியாளர், எதிரிணை மற்றும் துணை மனிதனின் தேவை என்பதைக் கடவுள் கண்டார்; ஆகையால், அவர் ஆடாமை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தி, ஒரு பொருத்தமான துணையை உருவாக்கினார்.

இரண்டாம் நூற்றாண்டு யூதத் துறவியான Dosetai ben Yaanai / டோசெட்டாய் பென் யானாய், ஓர் ஆண் ஒரு பெண்ணை கவர்ந்திழுப்பது இயல்பானது என்று எழுதினார். ஏன்? ஏனென்றால், அவர் இழந்ததை (அவரது விலா எலும்பு) தேடுகிறார்.

எபிரேய மொழியில், ஒரு மனிதனை ஈஷ் / Ish என்றும், ஒரு பெண், இஷா / Isha என்றும், இஷின் பெண்ணிய வடிவம் என்றும் அழைக்கப்படுகிறது. கடவுள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி இஸ்ரயேலை கவர்ந்திழுக்கும்போது, ​​இஸ்ரஏல் அவரிடமிருந்து கைகோர்த்து நிற்காமல், அவரை ஒரு கடுமையான அதிகார நபராகக் கருதுகிறது. அவரை அன்போடும் பாசத்துடனும் கருதும் ஒரு காலத்திற்கு இஸ்ரஏல் வரும் என்றும் வாக்குறுதி அளிக்கிறார்.

“அக்காலத்தில்” நீங்கள் என்னை אִישִׁי / ஈஷி (என் மனிதன்) என்று அழைப்பீர்கள், இனி என்னை בַּעְלִי / பாலீ (என் எஜமான்) என்று அழைக்க மாட்டீர்கள்” என்று கர்த்தர் அறிவிக்கிறார். (ஓசியா 2:16)

இஸ்ரஏல் தன்னை அன்பிலிருந்து சேவிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் – ஒரு பெண் தன் கணவனை நேசிப்பது போல. அதேபோல், இஸ்ரஏல் மீதான அவரது அன்பு ஒரு பேரன்பு, கனிவான கணவரின் பண்பு போலவே.

மேலும், கடவுள் அவருடனும், ஒருவருக்கொருவருடனும் ஆகிய நம்முடைய நெருங்கிய உறவுகளின் மீது அக்கறை கொண்டுள்ளார். ஆதிக்கம், கட்டுப்பாடு, கையாளுதல் மற்றும் வற்புறுத்தல் ஆகியவற்றால் ஆளப்படாமல், நம் உறவுகள் அன்பு மற்றும் பக்தியால் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

நல்ல உறவுகள் மற்றும் தூய்மையைப் பாதுகாப்பது மிகவும் மதிப்பு வாய்ந்தவை என்பதால், உலகில் வழக்கத்திற்கு மாறான தங்களுக்கான சரியான துணையைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு சிறந்த முறையை யூத மதம் கொண்டுள்ளது.

שִׁדּוּכִים‎ / Shidduchim (matchmaking) / ஷிட்டூகீம் (மேட்ச்மேக்கிங்) என்ற யூதப் பழக்கம் திருமண நோக்கத்திற்காக யூத ஆண்களையும் பெண்களையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறது. ஒரு வெற்றிகரமான ஷிடுஹ் (பொருத்தம்) உருவாக்குவது யூத மதத்தில் ஒரு சிறந்த Mitzvah / மிட்ஸ்வா (நல்ல செயல்) என்று கருதப்படுகிறது.

חַוָּה / Chavah / கவாவை (ஏவாள்) விவரிக்கும் வசனம் பெரும்பாலும் துணைவர் என்று மொழிபெயர்க்கப்பட்டாலும், ஆதியாகமம் 2:18ல் ஒரு மனைவியின் பாத்திரத்திற்குப் பயன்படுத்தப்படும் சொல் עֵזֶר כְּנֶגְדּוֹ / Ezer Kenegdo / ஏஸெர் கெனெக்டோ, அதாவது அவருக்குச் சமமான ஒரு எதிரிணை என்று பொருள்.

இந்த உரையைப் பற்றி இடைக்கால தோரா வர்ணனையாளர் ராஷி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அவர் [ஆடாம்] தகுதியானவர் என்றால், [அவள்] ஓர் உதவியாக இருப்பாள். அவர் தகுதியற்றவராக இல்லாவிட்டால் [அவள்] சச்சரவுக்காக அவருக்கு எதிராக இருப்பாள். ”

עֵזֶר / Ezer / ஏஸெர் என்ற சொல்லுக்குப் பாதுகாவலர், உதவியாளர் மற்றும் பணியாளர் என்று பொருள். எனவே கணவருக்கு உதவுவது என்பது எப்போதும் ஒப்புக்கொள்வது என்று அர்த்தமல்ல என்பதை இந்த உரையிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். ஒரு பெண் ‘ஆமாம்!’  என்றே சொல்லும் நபராக உருவாக்கப்படவில்லை. சில நேரங்களில், தன் கணவன்  விவேகமற்ற அல்லது நியாயத்திற்குப்  புறம்பான ஒரு விஷயத்தைத் திட்டமிடுகிறான், செய்கிறான் என்றால், அவள் கணவனுக்கு எதிராக நிற்க வேண்டும்.

מָרְדֳּכָי / Mordecai / மோர்டகாயை யூத வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை அழிக்க எடுத்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்று கணவருக்கு எச்சரிக்க முயன்ற הָמָן / Haman / ஹாமானின் மனைவியின் உதாரணத்தை நாம் எஸ்தரின் புத்தகத்தில் காணலாம்.

அவருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில், யூத-விரோத ஹாமான் தனது עֵזֶר כְּנֶגְדּוֹ / Ezer Kenegdo / ஏஸெர் கெனெக்டோவைக் கேட்கவில்லை.

அதேபோல், மனைவியாக இருப்பதால்  பெண் கணவனை விட முக்கியத்துவம் வாய்ந்தவள் அல்ல அல்லது தாழ்ந்தவள் என்று அர்த்தமல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, ரூஅக் ஹக்கோடெஷ் / רוּחַ הַקֺּדֶשׁ / Ruach HaKodesh(The Holy Spirit) – பரிசுத்த ஆவியானவர் –  தேற்றரவாளர் / துணையாளர் என்றும் அழைக்கப்படுகிறார். வேதத்தில் உதவியாளராக இருப்பது மேன்மையைக் குறிக்கிறது, “ஏஸெர்” என்ற சொல்லுக்கு “கெனெக்டோ” சேர்ப்பது மனைவியின் நிலை சமத்துவத்தின் நிலை என்பதை வெளிப்படுத்துகிறது.

தோட்டத்தில் வீழ்ச்சி

பெரேஷீத் பராஷாவில், துரதிர்ஷ்டவசமாக, ஒரு வஞ்சகச் சர்ப்பத்தின் தந்திரத்தின் காரணமாக, ஏவாள் பாவம் செய்தாள், ஆடாம் அவளுக்குப் பிறகு பாவம் செய்தான்; ஒரே நாளில் மனிதக்குலம் கிருபையிலிருந்து அவமானத்திற்குச் சென்றது!

ஆடாம் ஏவாளைக் குற்றம் சாட்டினான், ஏவாள் பாம்பைக் குற்றம் சாட்டினாள், ஆண்களும் பெண்களும் அது முதல் இதுவரை ஒருவரையொருவர் விரல் சுட்டி வருகிறார்கள்.

ஏடேன் தோட்டத்தில், மனித வரலாற்றில் முதல்முறையாக, அவமானம் தோன்றுவதைக் காண்கிறோம். கடவுளின் கோபத்தின் காரணமாக ‘ஒரு பயம்’ வெட்கத்துடன் தோன்றி வெளிவந்தது. தனது முழு அவமானத்தில், ஆடாம் நிர்வாணமாக இருப்பதை அறிந்து மரங்களுக்கு மத்தியில் ஒளிந்தான்.

ஏடேன் தோட்டத்தில் அவர்களின் கற்பனையில் கிடைக்காத, அடைக்கலம் மற்றும் அப்பாவி இருத்தலிலிருந்து, ஆடாமும் ஏவாளும் கொடூரமும் மன்னிக்கும் தன்மையற்ற உலகில் கஷ்டங்கள் மற்றும் வேதனைகளை அனுபவிக்கத் தள்ளப்பட்டனர்.

தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அவர்கள் வீழ்ந்த நிலைக்கு ஆளாகி வாழ்வின் மரத்திலிருந்து சாப்பிடுவது  தடுக்கப்பட்டது. அவர்களின் தற்காலிக வீழ்ச்சியடைந்த நிலை நித்திய வீழ்ச்சியடைந்ததாகயிராமல், தோட்டத்தின் தடைசெய்யப்பட்ட கதவு உற்ற நேரத்தின் முழுமையில் வீழ்ச்சியிலிருந்து மீட்பிற்கான கதவைத் திறந்தது.

சகோதரர் சகோதரனை (காயீன் மற்றும் ஆபெல்) கொலை செய்யும் அளவிற்கு, கடவுளின் படைப்பின் ஒழுங்கும் அழகும் தார்மீக சீரழிவிற்குள் மோசமடைந்த நிலையையும் நாம் வாசிக்கிறோம்.

பெரேஷீத் புத்தகத்தில் ஆறு அத்தியாயங்களில் மனிதக்குலம் ஆன்மீக ரீதியில் கடவுளிடமிருந்து பிரிந்து, எது நல்லது, எது கெட்டது என்பதைத் தாங்களே தீர்மானித்துக் கொண்டு, கடவுளின் இதயம் உடைந்துபோகும் வண்ணம் – தீமை, சீரழிவு மற்றும் வன்முறை போன்ற ஆழங்களுக்கு இறங்கியது. மனிதக்குலத்தைப் படைத்ததற்கு அவர் வருத்தப்படுகிறார்.

இருப்பினும், நல்ல செய்தி என்னவென்றால், இவை எதுவும் கடவுளுக்கு ஆச்சரியமாக வரவில்லை. பூமியின் அஸ்திவாரங்கள் போடப்படுவதற்கு முன்பே, மீட்பிற்கான ஒரு திட்டத்தைக் கடவுள் கொண்டிருந்தார். நம்முடைய எல்லாப் பாவங்களுக்கும் தண்டனையைச் செலுத்தத் தேவன் தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.

ஒரு புதிய துவக்கம்

“கர்த்தருடைய வார்த்தையினால் (டவார்) வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வ சேனையும் உண்டாக்கப்பட்டது.” (சங்கீதம் 33:6)

யோவானின் நற்செய்திப் புத்தகம் படைப்புக் கதையை எதிரொலிக்கிறது. இந்தப் புத்தகத்தின் முதல் சொல் இந்த தோராப் பகுதியில் காணப்படும் அதே முதல் வார்த்தையாகும்: பெரேஷீத் – ஆரம்பத்தில், வாசிக்கவும் (யோவான் 1:1–3, 14)

ஆரம்பத்தில் இயேசு இருந்தார், யோவான் அவரை படைப்பு சக்தியின் முகவர், பேசும் வார்த்தை (டவார்) மூலம் அனைத்தையும் உருவாக்கிய சக்தி என்று விவரிக்கிறார்.

வார்த்தை הדבר / HaDavar / ஹடாவார் என்று அழைக்கப்படும் இயேசு மூலமாகவும், நாம் கடவுளோடு ஓர் உறவில் நுழைகிறோம், அவருடனான நமது உண்மையான உரையாடல் தொடங்குகிறது.

நாம் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது, ​​ஹடவாருக்கு நம் இதயத்தில் ஒரு வீடு அமைகிறது. இதன் பொருள் என்னவென்றால், நாம் மீண்டும் பிறந்து, பிரபஞ்சத்தின் கடவுளான பரலோகத் தகப்பனின் குழந்தையாக ஒரு புதிய தொடக்கத்தைப் பெற்றுக் கொள்கிறோம் என்பதே.