பராஷா பெகுக்கோதய் (எனது சட்டங்களில்): சட்டத்தின் சாபத்திலிருந்து விடுதலை
பெகுக்கோதய் (எனது சட்டங்களில்)בְּחֻקֹּתַי
லேவியராகமம் 26:3–27:34; எரேமியா 16:19–17:14; மத்தேயு 22:1–14;
பெகுக்கோதய், லேவியராகமம் புத்தகத்திலிருந்து கடைசியாக வாசிக்கப்படும் இந்த பராஷாவானது, கீழ்ப்படிதலின் ஆசீர்வாதங்களையும் கீழ்ப்படியா மையின் சாபங்களையும் விவரிக்கிறது.
மனிதர்கள் தன் chukkot / חֻקּוֹת / குக்கோத் – சட்டங்களையும், mitzvot / מִצְווֹת / மிட்ஸ்வோத் – கட்டளைகளையும் கடைப்பிடித்தால், அவர்கள் பூமியில் செழிப்புடனும், அச்சமின்றியும் இருப்பார்கள் என்று கடவுள் மக்களுக்கு வாக்களிக்கிறார்.
அவர்கள் தோராவை நிராகரித்து, அவருடைய உடன்படிக்கையைக் கைவிட்டால், அவர்கள் சபிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
இந்த அச்சுறுத்தும் உபதேசம் tochacha / תּוֹכָחָה / தோகாகா (கண்டிப்பு அல்லது கடிந்துரைத்தல்) என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது போன்ற எச்சரிக்கை கொடுக்கப்பட்ட இரண்டு தோரா பகுதிகளில் இது ஒன்றாகும் மற்றொன்று கீ தாவோ (உபாகமம் 26:1–29:8).
ஆசீர்வாதங்களில் நடப்பது
கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதினால் பலனளிக்கும் பொதுவான ஆசீர்வாதங்களை விவரிக்கும் பத்து வசனங்களுடன் பராஷா பெகுக்கோதய் தொடங்குகிறது.
கடவுளுடைய வாக்குத்தத்தங்களில் முதலாவது, தேசத்தில் பருவகால மழையாகும், இது விதை விதைத்து, கதிரடித்து அளவுக்கு மிகுதியாகப் பழங்களை உற்பத்தி செய்யும் காலம் வரை காலம் நீட்டிக்கப்படும்
லேவியராகமம் 26:4
எல்லாவற்றிற்கும் ஒரு காலமும் பருவமும் இருக்கிறது என்பதைப் பிரசங்கி புத்தகம் நமக்கு நினைவூட்டுகிறது. பிரசங்கி 3:1
உலகெங்கிலும் நாம் சமீபத்தில் பார்த்தபடி, பருவம் தவறிய மழை அல்லது மழையின்மை ஆசீர்வாதத்தை விட அழிவுடன் தொடர்புடையது. கடவுளின் ஆசீர்வாதங்கள் எப்போதும் சரியான நேரத்தில் வழங்கப்படுகின்றன.
மேலும், நாம் அவருடைய கட்டளைகளை (தோரா) கைக்கொண்டால், நாம் பூமியில் சமாதானத்துடனேயே வாழ்வோம் என்றும், நம்முடைய பகைவர்களை நாம் துரத்திச் செல்வோம் என்றும், அவர்கள் நம் முன் விழுந்து விடுவார்கள் என்றும் கடவுள் வாக்களிக்கிறார்.
லேவியராகமம் 26:6–7
ஆசீர்வாதத்தின் இந்த ஆறுதலளிக்கும் பகுதி, அவருடைய ஜனங்களோடு பரஸ்பர உறவு என்ற கடவுளுடைய வாக்குத்தத்தத்துடன் முடிவடைகிறது.
அவர்கள் தம்முடைய வழிகளில் நடந்தால், அவர் அவர்களைத் தம்முடைய ஜனங்களாக ஏற்றுக்கொண்டு, தம்முடைய வாசஸ்தலத்தை அவர்கள் நடுவிலே வைத்து, அவர்கள் நடுவிலே நடப்பார்.
லேவியராகமம் 26:12
கீழ்ப்படிதலால் விளையும் ஆசீர்வாதங்கள் அவரது குக்கோத்தில் (சிவப்பு கிடாயின் சட்டம் போன்ற பகுத்தறிவை மீறும் தெய்வீகக் கட்டளைகள் அல்லது சட்டங்கள்) நடப்பது (halak / הָלַךְ / ஹாலக்) மற்றும் அவரது மிட்ஸ்வோத் (கட்டளைகள்) ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் உருவகத்தால் கட்டமைக்கப்படுகின்றன.
13 ஆசீர்வாதங்களின் பட்டியல், எகிப்தில் அடிமைத்தனத்தின் கட்டுகளிலிருந்து இஸ்ரயேலர்களை தேவன் விடுவித்தார் என்பதை ஒரு விசித்திரமான நினைவூட்டலுடன் முடிவடைகிறது.
லேவியராகமம் 26:13
இஸ்ரயேலர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தி, அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவித்ததன் மூலம் நேர்மையாக நடக்கத் தேவன்தான் உதவினார் என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் புரிந்துகொள்கிறோம்.
இந்த உடன்படிக்கை உறவுக்குள்தான் அவர்கள் அவருடைய வழிகளில் நடக்க முடிந்தது.
பெகுக்கோதயில் நடப்பது மற்றும் வைத்திருப்பது என்ற இந்த வினைச்சொற்கள் ஆசீர்வாதம் நம் பாகங்களில் வேண்டுமென்றே செயல்படுவதிலிருந்து வருகிறது என்பதைக் குறிக்கிறது. ஆயியென்றும்கூட, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவது அவர் நம்மை விடுதலையாக்கியதால் மட்டுமே சாத்தியமாகும்.
கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெறுவது அற்புதமானது; இருப்பினும், இந்த வாக்குறுதிகள் நமது கீழ்ப்படிதலின் மீது நிபந்தனைக்குட்பட்டவை. கீழ்ப்படியாமையால் நடப்பதும், கடவுளுடனான நமது உறவினால் விளையும் ஆசீர்வாதங்களைக் கோருவதும் பயனற்றது. கீழ்ப்படியாமை என்பது முறிந்த உறவின் அறிகுறியாகும்.
கீழ்ப்படியாமை, சாபங்கள், நாடுகடத்தப்படுதல்
கீழ்ப்படியா மையின் விளைவாக ஏற்படும் 30 குறிப்பிட்ட சாபங்களை விவரிக்கும் 28-வசனப் பிரிவு இந்த பராஷாவின் ஆசீர்வாதப் பிரிவைப் பின் தொடர்ந்து வருகிறது.
கடவுளுடைய ஜனங்கள் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமற்போனால், அவர்கள்மேல் வரப்போகிற மோசமான விளைவுகளின் பட்டியல் இது. இந்தப் பத்திகள் ஜெப ஆலயத்தில் பயத்துடனும் நடுக்கத்துடனும் ஓதப்படுகின்றன.
லேவியராகமம் 26:16–17
தேசத்தில் மீதியானவர்கள் எஞ்சியிருந்தாலும், யூத ஜனங்கள் பூமியின் நான்கு மூலைகளிலும் சிதறடிக்கப்பட்டார்கள், அங்கு அவர்கள் அந்தத் தேசங்களில் துன்புறுத்தப்பட்டார்கள்.
லேவியராகமம் 26:33
யூத மக்கள் நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்தபோது, இஸ்ரயேல் மக்கள் வசித்தபோது மறுத்த இளைப்பாறுதலை அந்தப் பூமியே தனக்குக் கொடுத்துக் கொண்டது.
அவர்களுடைய கீழ்ப்படியாமைக்காக இஸ்ரயேலின்மேல் வரப்போகிற கடுமையான தண்டனைகளையும் பயங்கரமான பேரழிவுகளையும் வேதனையான விவரிப்பு இருந்தபோதிலும், தேவன் ஆறுதலும் தேற்றுதலும் நிறைந்த ஒரு வார்த்தையோடு முடிக்கிறார்.
லேவியராகமம் 26:44–45
தம்முடைய ஜனங்களுக்குக் கடவுளுடைய அன்பு, மனித உணர்ச்சியின் நிலையற்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல; இது உடன்படிக்கையின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது.
இஸ்ரயேலர்கள் எகிப்திலிருந்து வெளியே வந்தபோது அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட உடன்படிக்கை ஆசீர்வாதங்கள், குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வந்தன. நிபந்தனைகள் இல்லாமல் வந்தது ஆபிரகாமிய உடன்படிக்கை.
மேலும் பைபிளின் நம்பகத்தன்மைக்கும் கடவுளுடைய உண்மைக்கும் அத்தாட்சியாக, இஸ்ரயேலின் தற்கால அரசை ஸ்தாபிப்பதற்கும், தேசத்தை அற்புதமான பலனளிப்பும் மீட்டெடுப்பதற்கும், பூகோளத்தின் நான்கு மூலைகளிலிருந்தும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அவருடைய ஜனங்களை வீட்டுக்கு இழுப்பதற்கும் மேலாக நாம் பார்க்க வேண்டியதில்லை.
கடவுளை நம்புதல்
எரேமியா 17:5
பெகுக்கோதயின் தீர்க்கதரிசனப் பகுதி, ஓர் உடன்படிக்கை உறவில் கடவுளுடன் நடப்பதோடு தொடர்புடைய ஆசீர்வாதங்களின் கருப்பொருளையும், அவரை விட்டு விலகிச் செல்வதோடு தொடர்புடைய சாபங்களையும் பின்பற்றுகிறது.
இந்தப் பகுதியில், தீர்க்கதரிசியாகிய எரேமியா இஸ்ரயேல் ஜனங்கள் விக்கிரகாராதனைக்காகவும், விசுவாசமின்மைக்காகவும் அவர்களைக் கடிந்துகொண்டு, அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று சொல்கிறார்.
எரேமியா ஜெபிப்பதன் மூலம் இஸ்ரயேலின் நம்பிக்கையில் தனக்குள்ள நம்பிக்கையைக் காட்டும்போது, ஹஃப்டாரா பிரிவு எதிர்பார்ப்புடன் முடிவடைகிறது, எரேமியா 17:14
எரேமியாவின் மற்ற இடங்களில், தேவன் இந்தத் தீர்க்கதரிசியின் மூலம் ஒரு புதிய உடன்படிக்கையை (பெரீத் கடாஷா) வாக்குக் கொடுக்கிறார், அதில் தேவனுடைய நியாயப்பிரமாணம் இருதயத்தின்மேல் எழுதப்பட்டிருக்கும் என்று சொல்கிறார்.
எரேமியா 31:31-32
இந்தப் புதிய உடன்படிக்கை மேசியாவாகிய இயேஷூஅ ரோம மரணதண்டனைக் கழுமரத்தில் மரித்தபோது அவருடைய இரத்தத்தில் முத்திரையிடப்பட்டது.
பஸ்கா நாளில், அவர் இறப்பதற்கு ஒரு நாளுக்கும் குறைவான நேரத்திற்கும் குறைவான காலத்தில், இயேஷூஅ மீட்புக் கிண்ணத்தை உயர்த்திப் பிடித்து:
“இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை…”- லூக்கா 22:20
இந்த உடன்படிக்கையின் பெலத்தின் கீழ், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, இனி நினைவுகூரப்படுவதில்லை. (ஏசாயா 43:25)
ஆனால் மேசியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சுதந்திரம், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்டுள்ள தராதரங்களைக் கைவிட்டு, பாவத்திற்கு நமக்கு ஓர் உரிமத்தைக் கொடுக்கிறதா? Sha’ul / שָׁאוּל / யூத ரபீ ஷாஊல் (அப்போஸ்தலர் பவுல்) இந்தக் கேள்விக்கு ஒரு மகத்தான பதிலளிக்கிறார்!
ரோமர் 6:1–2
நம்முடைய பாவங்களுக்கும் நியாயப்பிரமாணத்தின் விளைவாக உண்டான சாபத்திற்கும் இயேஷூஅ விலை கொடுத்திருந்தாலும், விசுவாசத்தினாலே தேவனுடைய அன்பில் நாம் நிலைத்திருக்க முடியும் என்றாலும், பரிசுத்தத்தில் நடக்கவேண்டும் என்ற நமது அழைப்பைப் புதிய உடன்படிக்கை எந்த விதத்திலும் பயனற்றதாக்கவில்லை.
பாவத்திற்கு அடிமைத்தனத்திலிருந்து அவர் நம்மை விடுவித்திருக்கிறார், நியாயப்பிரமாணத்தின் சாபங்களை அனுபவித்து, இனிமேலும் அந்தத் தீய எஜமானருக்கு நாம் சேவை செய்ய வேண்டியதில்லை.
தண்டனைக்குப் பயந்து நாம் தேவனைச் சேவிக்க வேண்டியதில்லை; மாறாக, இந்த தோரா பகுதியில் வாக்குறுதியளிக்கப்பட்ட உறவை அனுபவிக்க நாம் இப்போது சுதந்திரமாக இருக்கிறோம். அவர் நம்மிடையே நடக்கிறார், அவர் நமக்காகச் செய்த எல்லாவற்றிற்காகவும் அன்பு, பக்தி, நன்றியறிதல் ஆகியவற்றினால் அவரைச் சேவிக்கிற அவருடைய ஜனங்களாகிய நாம்.
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் புத்தகத்தில், மேசியா இயேஷூஅவிலுள்ள தேவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எதுவுமில்லை— முற்றிலும் ஒன்றுமில்லை— ஒன்றுமில்லை— என்று எழுதினார்.
இதுதான் உண்மையிலேயே நல்ல செய்தி!
ரோமர் 8:38-39
கீழ்ப்படியா மையின் காரணமாகத் தேவன் தம்முடைய ஜனங்களை நாடுகடத்தியபோது, அது இறுதியாக இளைப்பாறக்கூடியதாக இருக்கும் என்று வலியுறுத்துவதன் மூலம், பரிசுத்தத் தேசம் அதன் ஷெமிடா வருடத்தில் இளைப்பாறுவதின் முக்கியத்துவத்தை இந்த தோரா பகுதி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
லேவியராகமம் 26:34
நிச்சயமாகக் கடவுள் தன் சமூகத்தார் மீது, அவர்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்றியதிலேயே மிக மோசமான வேதனையைக் கொண்டு வந்தார்.