பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Luke  லூக்கா  Λουκᾶν

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

லூக்கா 4 | Luke 4

The Temptation of Jesus (Matthew 4:1–11; Mark 1:12–13)

1δὲ Ἰησοῦς πλήρης Ἁγίου Πνεύματος ὑπέστρεψεν ἀπὸ τοῦ Ἰορδάνου καὶ ἤγετο ἐν τῷ Πνεύματι ἐν τῇ ἐρήμῳ

1 இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானைவிட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு,
1 Then Jesus, full of the Holy Spirit, returned from the Jordan and was led by the Spirit into the wilderness,a
1 இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

2τεσσεράκοντα ἡμέρας πειραζόμενος ὑπὸ τοῦ διαβόλου Καὶ ἔφαγεν οὐκ οὐδὲν ἐν ἐκείναις ταῖς ἡμέραις καὶ αὐτῶν συντελεσθεισῶν ἐπείνασεν

2 நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
2 where for forty days He was tempted by the devil. He ate nothing during those days, and when they had ended, He was hungry.
2 அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார்.

3δὲ ὁ διάβολος Εἶπεν αὐτῷ Εἰ εἶ Υἱὸς τοῦ Θεοῦ εἰπὲ τῷ τούτῳ λίθῳ ἵνα γένηται ἄρτος

3 அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.
3 The devil said to Him, “If You are the Son of God, tell this stone to become bread.”
3 அப்பொழுது அலகை அவரிடம் , "நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்" என்றது.

4Καὶ ὁ Ἰησοῦς ἀπεκρίθη πρὸς αὐτὸν Γέγραπται ὅτι ὁ ἄνθρωπος Οὐκ ζήσεται ἐπ’ ἄρτῳ μόνῳ

4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
4 But Jesus answered, “It is written: ‘Man shall not live on bread alone.’”b
4 அதனிடம் இயேசு மறுமொழியாக, " 'மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை' என மறைநூலில் எழுதியுள்ளதே" என்றார்.1

5Καὶ ἀναγαγὼν αὐτὸν ἔδειξεν αὐτῷ ἐν στιγμῇ χρόνου πάσας τὰς βασιλείας τῆς οἰκουμένης

5 பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
5 Then the devil led Him up to a high place and showed Him in an instant all the kingdoms of the world.
5 பின்பு, அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,

6δώσω Σοὶ τὴν ἐξουσίαν ἅπασαν ταύτην καὶ αὐτῶν τὴν δόξαν καὶ ὁ διάβολος εἶπεν αὐτῷ ὅτι παραδέδοται ἐμοὶ καὶ δίδωμι αὐτήν ᾧ ἐὰν θέλω

6 இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
6 “I will give You authority over all these kingdoms and all their glory,” he said. “For it has been relinquished to me, and I can give it to anyone I wish.
6 அவரிடம், "இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன்.2

7οὖν ἐὰν σὺ προσκυνήσῃς ἐνώπιον ἐμοῦ πᾶσα ἔσται σοῦ

7 நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
7 So if You worship me, it will all be Yours.”
7 நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்" என்றது.

8Καὶ ὁ Ἰησοῦς ἀποκριθεὶς εἶπεν αὐτῷ Γέγραπται Προσκυνήσεις «Κύριον σου» τὸν Θεόν καὶ λατρεύσεις αὐτῷ μόνῳ

8 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
8 But Jesus answered, “It is written: ‘Worship the Lord your God and serve Him only.’”c
8 இயேசு அதனிடம் மறுமொழியாக, " 'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக' என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்றார்.

9δὲ Ἤγαγεν αὐτὸν εἰς Ἰερουσαλὴμ καὶ ἔστησεν ἐπὶ τὸ πτερύγιον τοῦ ἱεροῦ Εἰ εἶ Υἱὸς τοῦ Θεοῦ καὶ εἶπεν αὐτῷ βάλε σεαυτὸν κάτω ἐντεῦθεν

9 அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.
9 Then the devil led Him to Jerusalem and set Him on the pinnacle of the temple. “If You are the Son of God,” he said, “throw Yourself down from here.
9 பின்னர், அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, "நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்;

10γὰρ γέγραπται ὅτι ἐντελεῖται αὐτοῦ Τοῖς ἀγγέλοις περὶ σοῦ τοῦ διαφυλάξαι σε

10 ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
10 For it is written: ‘He will command His angels concerning You to guard You carefully;
10 'உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்' என்றும்3

11καὶ ἀροῦσίν σε ὅτι ἐπὶ χειρῶν μή‿ ποτε προσκόψῃς σου τὸν πόδα πρὸς λίθον

11 உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
11 and they will lift You up in their hands, so that You will not strike Your foot against a stone.’”d
11 'உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது" என்றது.4

12Καὶ ὁ Ἰησοῦς ἀποκριθεὶς εἶπεν αὐτῷ ὅτι Εἴρηται Οὐκ ἐκπειράσεις Κύριον σου τὸν Θεόν

12 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.
12 But Jesus answered, “It also says, ‘Do not put the Lord your God to the test.’”e
12 இயேசு அதனிடம் மறுமொழியாக, " 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே" என்றார்.5

13Καὶ ὁ διάβολος συντελέσας πάντα πειρασμὸν ἀπέστη ἀπ’ αὐτοῦ ἄχρι καιροῦ

13 பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.
13 When the devil had finished every temptation, he left Him until an opportune time.
13 அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

Jesus Begins His Ministry (Isaiah 9:1–7; Matthew 4:12–17; Mark 1:14–15)

14Καὶ ὁ Ἰησοῦς ὑπέστρεψεν εἰς τὴν Γαλιλαίαν ἐν τῇ δυνάμει τοῦ Πνεύματος καὶ φήμη περὶ αὐτοῦ ἐξῆλθεν καθ’ ὅλης τῆς περιχώρου

14 பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.
14 Jesus returned to Galilee in the power of the Spirit, and the news about Him spread throughout the surrounding region.
14 பின்பு, இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.

15καὶ αὐτὸς ἐδίδασκεν ἐν αὐτῶν ταῖς συναγωγαῖς δοξαζόμενος ὑπὸ πάντων

15 அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.
15 He taught in their synagogues and was glorified by everyone.
15 அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.

The Rejection at Nazareth (Isaiah 61:1–11; Matthew 13:53–58; Mark 6:1–6)

16Καὶ ἦλθεν εἰς Ναζαρά οὗ ἦν τεθραμμένος καὶ κατὰ αὐτῷ τὸ εἰωθὸς εἰσῆλθεν εἰς τὴν συναγωγήν ἐν τῇ τῶν σαββάτων ἡμέρᾳ καὶ ἀνέστη ἀναγνῶναι

16 தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
16 Then Jesus came to Nazareth, where He had been brought up. As was His custom, He entered the synagogue on the Sabbath. And when He stood up to read,
16 இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.

17καὶ βιβλίον τοῦ προφήτου Ἠσαΐου ἐπεδόθη αὐτῷ καὶ ἀναπτύξας* τὸ βιβλίον εὗρεν τὸν τόπον οὗ ἦν γεγραμμένον

17 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
17 the scroll of the prophet Isaiah was handed to Him. Unrolling it, He found the place where it was written:
17 இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:

18Πνεῦμα Κυρίου ἐπ’ ἐμέ εἵνεκεν Οὗ ἔχρισέν με Εὐαγγελίσασθαι πτωχοῖς Ἀπέσταλκέν με κηρῦξαι ἄφεσιν αἰχμαλώτοις Καὶ ἀνάβλεψιν τυφλοῖς Ἀποστεῖλαι ἐν ἀφέσει τεθραυσμένους

18 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
18 “The Spirit of the Lord is on Me, because He has anointed Me to preach good news to the poor. He has sent Me to proclaim liberty to the captivesf and recovery of sight to the blind, to release the oppressed,
18 "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்

19Κηρῦξαι ἐνιαυτὸν Κυρίου δεκτόν

19 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
19 to proclaim the year of the Lord’s favor.”g
19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்."6

20Καὶ πτύξας τὸ βιβλίον ἀποδοὺς τῷ ὑπηρέτῃ ἐκάθισεν καὶ οἱ ὀφθαλμοὶ πάντων ἐν τῇ συναγωγῇ ἦσαν ἀτενίζοντες αὐτῷ

20 வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.
20 Then He rolled up the scroll, returned it to the attendant, and sat down. The eyes of everyone in the synagogue were fixed on Him,
20 பின்னர், அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.

21δὲ ἤρξατο λέγειν πρὸς αὐτοὺς ὅτι Σήμερον αὕτη ἡ γραφὴ πεπλήρωται ἐν ὑμῶν τοῖς ὠσὶν

21 அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.
21 and He began by saying, “Today this Scripture is fulfilled in your hearing.”
21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார்.

22Καὶ πάντες ἐμαρτύρουν αὐτῷ καὶ ἐθαύμαζον ἐπὶ τοῖς χάριτος τῆς λόγοις τοῖς ἐκπορευομένοις ἐκ αὐτοῦ τοῦ στόματος ἐστιν Οὐχὶ οὗτος υἱός Ἰωσὴφ καὶ ἔλεγον

22 எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.
22 All spoke well of Him and marveled at the gracious words that came from His lips. “Isn’t this the son of Joseph?” they asked.
22 அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?" எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

23Καὶ εἶπεν πρὸς αὐτούς Πάντως ἐρεῖτέ ταύτην τὴν παραβολὴν μοι Ἰατρέ θεράπευσον σεαυτόν ποίησον καὶ ὧδε ἐν σου τῇ πατρίδι ὅσα ἠκούσαμεν γενόμενα εἰς τὴν Καφαρναοὺμ

23 அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடனே சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.
23 Jesus said to them, “Surely you will quote this proverb to Me: ‘Physician, heal yourself! Do here in Your hometown what we have heard that You did in Capernaum.’”
23 அவர் அவர்களிடம், "நீங்கள் என்னிடம், 'மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்' என்னும் பழமொழியைச் சொல்லி, 'கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.

24δέ Εἶπεν Ἀμὴν λέγω ὑμῖν ὅτι οὐδεὶς προφήτης ἐστιν δεκτός ἐν αὐτοῦ τῇ πατρίδι

24 ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24 Then He added, “Truly I tell you, no prophet is accepted in his hometown.
24 ஆனால், நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

25δὲ λέγω ὑμῖν ἐπ’ ἀληθείας ἦσαν πολλαὶ χῆραι ἐν τῷ Ἰσραήλ ἐν ταῖς ἡμέραις Ἠλίου ὅτε ὁ οὐρανὸς ἐκλείσθη ἐπὶ τρία καὶ ἕξ μῆνας ἔτη ὡς μέγας λιμὸς ἐγένετο ἐπὶ πᾶσαν τὴν γῆν

25 அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலுக்குள் அநேகம் விதைவைகள் இருந்தார்கள்.
25 But I tell you truthfully that there were many widows in Israel in the time of Elijah, when the sky was shut for three and a half years and great famine swept over all the land.
25 உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.7

26καὶ Ἠλίας ἐπέμφθη πρὸς οὐδεμίαν αὐτῶν εἰ μὴ πρὸς γυναῖκα χήραν εἰς Σάρεπτα τῆς Σιδωνίας

26 ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பபட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை.
26 Yet Elijah was not sent to any of them, but to the widow of Zarephath in Sidon.
26 ஆயினும், அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.8

27καὶ ἦσαν πολλοὶ λεπροὶ ἐν τῷ Ἰσραὴλ ἐπὶ Ἐλισαίου τοῦ προφήτου καὶ οὐδεὶς αὐτῶν ἐκαθαρίσθη εἰ μὴ Ναιμὰν ὁ Σύρος

27 அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
27 And there were many lepersh in Israel in the time of Elisha the prophet. Yet not one of them was cleansed—only Naaman the Syrian.”
27 மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது" என்றார்.9

28Καὶ ἀκούοντες ταῦτα πάντες ἐν τῇ συναγωγῇ ἐπλήσθησαν θυμοῦ

28 ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும் இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு,
28 On hearing this, all the people in the synagogue were enraged.
28 தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்;10

29καὶ ἀναστάντες ἐξέβαλον αὐτὸν ἔξω τῆς πόλεως καὶ ἤγαγον αὐτὸν ἕως ὀφρύος τοῦ ὄρους ἐφ’ οὗ αὐτῶν ἡ πόλις ᾠκοδόμητο ὥστε κατακρημνίσαι αὐτόν

29 எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
29 They got up, drove Him out of the town, and led Him to the brow of the hill on which the town was built, in order to throw Him over the cliff.
29 அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர்.

30δὲ αὐτὸς διελθὼν διὰ αὐτῶν μέσου ἐπορεύετο

30 அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார்.
30 But Jesus passed through the crowd and went on His way.
30 அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.11

Jesus Expels an Unclean Spirit (Mark 1:21–28)

31Καὶ κατῆλθεν εἰς Καφαρναοὺμ πόλιν τῆς Γαλιλαίας καὶ ἐν τοῖς σάββασιν ἦν διδάσκων αὐτοὺς

31 பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.
31 Then He went down to Capernaum, a town in Galilee, and on the Sabbath He began to teach the people.
31 பின்பு, இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார்.

32καὶ ἐξεπλήσσοντο ἐπὶ αὐτοῦ τῇ διδαχῇ ὅτι αὐτοῦ λόγος ἦν ὁ ἐν ἐξουσίᾳ

32 அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக் குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
32 They were astonished at His teaching, because His message had authority.
32 அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில், அவர் அதிகாரத்தோடு கற்பித்தார்.12

33Καὶ ἐν τῇ συναγωγῇ ἦν ἄνθρωπος ἔχων πνεῦμα ἀκαθάρτου δαιμονίου καὶ ἀνέκραξεν μεγάλῃ φωνῇ

33 ஜெபஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.
33 In the synagogue there was a man possessed by the spirit of an unclean demon. He cried out in a loud voice,
33 தொழுகைக் கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.

34Ἔα τί σοί καὶ ἡμῖν Ἰησοῦ Ναζαρηνέ ἦλθες ἀπολέσαι ἡμᾶς οἶδά τίς σε εἶ ὁ Ἅγιος τοῦ Θεοῦ

34 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக்கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னாரென்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்தசத்தமிட்டான்.
34 “Ha! What do You want with us, Jesus of Nazareth? Have You come to destroy us? I know who You are—the Holy One of God!”
34 அவரைப் பிடித்திருந்த பேய், "ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று உரத்த குரலில் கத்தியது.

35Καὶ ὁ Ἰησοῦς ἐπετίμησεν αὐτῷ Φιμώθητι λέγων καὶ ἔξελθε ἀπ’ αὐτοῦ καὶ τὸ δαιμόνιον ῥίψαν αὐτὸν εἰς τὸ μέσον ἐξῆλθεν ἀπ’ αὐτοῦ μηδὲν βλάψαν αὐτόν

35 அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவிலே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.
35 But Jesus rebuked the demon. “Be silent!” He said. “Come out of him!” At this, the demon threw the man down before them all and came out without harming him.
35 "வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ" என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச்செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரைவிட்டு வெளியேறிற்று.

36Καὶ πάντας ἐγένετο ἐπὶ θάμβος καὶ συνελάλουν πρὸς ἀλλήλους λέγοντες Τίς ὁ οὗτος λόγος ὅτι ἐν ἐξουσίᾳ καὶ δυνάμει ἐπιτάσσει τοῖς ἀκαθάρτοις πνεύμασιν καὶ ἐξέρχονται

36 எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப்போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
36 All the people were overcome with amazement and asked one another, “What is this message? With authority and power He commands the unclean spirits, and they come out!”
36 எல்லாரும் திகைப்படைந்து, "எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர்.

37καὶ ἦχος περὶ αὐτοῦ ἐξεπορεύετο εἰς πάντα τόπον τῆς περιχώρου

37 அவருடைய கீர்த்தி சுற்றிலுமிருந்த நாடுகளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று.
37 And the news about Jesus spread throughout the surrounding region.
37 அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.

Jesus Heals at Peter’s House (Matthew 8:14–17; Mark 1:29–34)

38δὲ Ἀναστὰς ἀπὸ τῆς συναγωγῆς εἰσῆλθεν εἰς τὴν οἰκίαν Σίμωνος δὲ τοῦ Σίμωνος πενθερὰ ἦν συνεχομένη μεγάλῳ πυρετῷ καὶ ἠρώτησαν αὐτὸν περὶ αὐτῆς

38 பின்பு அவர் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜுரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.
38 After Jesus had left the synagogue, He went to the home of Simon, whose mother-in-law was suffering from a high fever. So they appealed to Jesus on her behalf,
38 பின்பு, இயேசு தொழுகைக் கூடத்தைவிட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள்.

39καὶ ἐπιστὰς ἐπάνω αὐτῆς ἐπετίμησεν τῷ πυρετῷ καὶ ἀφῆκεν αὐτήν δὲ ἀναστᾶσα παραχρῆμα διηκόνει αὐτοῖς

39 அவர் அவளிடத்தில் குனிந்துநின்று, ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
39 and He stood over her and rebuked the fever, and it left her. And she got up at once and began to serve them.
39 இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவரைவிட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.

40δὲ Δύνοντος τοῦ ἡλίου ἅπαντες ὅσοι εἶχον ἀσθενοῦντας ποικίλαις νόσοις ἤγαγον αὐτοὺς πρὸς αὐτόν δὲ ὁ ἐπιτιθεὶς τὰς χεῖρας ἑκάστῳ ἑνὶ αὐτῶν ἐθεράπευεν αὐτούς

40 சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
40 At sunset, all who were ill with various diseases were brought to Jesus, and laying His hands on each one, He healed them.
40 கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டிவந்தார்கள். அவர் ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார்.

41δὲ δαιμόνια καὶ ἐξήρχετο ἀπὸ πολλῶν κραυγάζοντα καὶ λέγοντα ὅτι Σὺ εἶ ὁ Υἱὸς τοῦ Θεοῦ καὶ ἐπιτιμῶν οὐκ εἴα αὐτὰ λαλεῖν ὅτι ᾔδεισαν αὐτὸν εἶναι τὸν Χριστὸν

41 பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்.
41 Demons also came out of many people, shouting, “You are the Son of God!” But He rebuked the demons and would not allow them to speak, because they knew He was the Christ.
41 பேய்களும், "நீர் இறைமகன்" என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்.

Jesus Preaches in Judea (Mark 1:35–39)

42δὲ Γενομένης ἡμέρας ἐξελθὼν ἐπορεύθη εἰς ἔρημον τόπον καὶ οἱ ὄχλοι ἐπεζήτουν αὐτόν καὶ ἦλθον ἕως αὐτοῦ καὶ κατεῖχον αὐτὸν μὴ τοῦ πορεύεσθαι ἀπ’ αὐτῶν

42 உதயமானபோது, அவர் புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத்தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத்திக்கொண்டார்கள்.
42 At daybreak, Jesus went out to a solitary place, and the crowds were looking for Him. They came to Him and tried to keep Him from leaving.
42 பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களைவிட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர்.

43δὲ ὁ εἶπεν πρὸς αὐτοὺς ὅτι με δεῖ εὐαγγελίσασθαί τὴν βασιλείαν τοῦ Θεοῦ ταῖς ἑτέραις πόλεσιν Καὶ ὅτι ἐπὶ τοῦτο ἀπεστάλην

43 அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.
43 But Jesus told them, “I must preach the good news of the kingdom of God to the other towns as well, because that is why I was sent.”
43 அவரோ அவர்களிடம், "நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்" என்று சொன்னார்.

44Καὶ ἦν κηρύσσων εἰς τὰς συναγωγὰς τῆς Ἰουδαίας

44 அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம் பண்ணிக்கொண்டுவந்தார்.
44 And He continued to preach in the synagogues of Judea.i
44 பின்பு, அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிவந்தார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Luke Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
1 a Or in the wilderness
4 b Deuteronomy 8:3; BYZ and TR on bread alone, but on every word of God .
8 c Deuteronomy 6:13; BYZ and TR “Get behind Me, Satan! For it is written…
11 d Psalm 91:11–12
12 e Deuteronomy 6:16
18 f BYZ and TR He has sent Me to heal the brokenhearted, to proclaim liberty to the captives
19 g Or to proclaim the acceptable year of the Lord ; Isaiah 61:1–2 (see also LXX)
27 h A leper  was one afflicted with a skin disease. See Leviticus 13.
44 i BYZ and TR Galilee ; see Mark 1:39.

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.