பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 8 | John 8

The Woman Caught in Adultery

1δὲ Ἰησοῦς ἐπορεύθη εἰς τὸ ὄρος τῶν ἐλαιῶν

1 இயேசு ஒலிவமலைக்குப் போனார்.
1 But Jesus went to the Mount of Olives.
1 [இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார்.

2Ὄρθρου δὲ πάλιν παρεγένετο εἰς τὸ ἱερόν καὶ πᾶς ὁ λαὸς ἤρχετο πρὸς αὐτόν καὶ καθίσας ἐδίδασκεν αὐτούς

2 மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.
2 Early in the morning He went back into the temple courtsa . All the people came to Him, and He sat down to teach them.
2 பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.

3οἱ γραμματεῖς καὶ οἱ Φαρισαῖοι δὲ ἄγουσιν* 〈πρὸς αὐτὸν〉 γυναῖκα κατειλημμένην ἐπὶ* μοιχείᾳ καὶ στήσαντες αὐτὴν ἐν μέσῳ

3 அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
3 The scribes and Pharisees, however, brought to Him a woman caught in adultery. They made her stand before them
3 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,

4λέγουσιν αὐτῷ Διδάσκαλε αὕτη ἡ γυνὴ κατείληπται* ἐπ’* αυτοφώρῳ* μοιχευομένη

4 போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
4 and said, “Teacher, this woman was caught in the act of adultery.
4 "போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.

5δὲ ἐν τῷ νόμῳ Μωϋσῆς* ἐνετείλατο ἡμῖν τὰς λιθάζειν* τοιαύτας οὖν τί σὺ λέγεις

5 இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
5 In the Law Moses commanded us to stone such a woman. So what do You say?”
5 இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?" என்று கேட்டனர்.1

6δὲ ἔλεγον Τοῦτο πειράζοντες αὐτόν ἵνα ἔχωσιν* κατηγορεῖν αὐτοῦ δὲ ὁ Ἰησοῦς κύψας κάτω κατέγραφεν* εἰς τὴν γῆν τῷ δακτύλῳ

6 அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
6 They said this to test Him, in order to have a basis for accusing Him. But Jesus bent down and began to write on the ground with His finger.
6 அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.

7δὲ Ὡς ἐπέμενον ἐρωτῶντες αὐτόν [ἀνέκυψεν καὶ εἶπεν αὐτοῖς] Ὁ ἀναμάρτητος ὑμῶν 〈τὸν〉 πρῶτος βαλέτω» λίθον «ἐπ’ αὐτῇ

7 அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
7 When they continued to question Him, He straightened up and said to them, “Let him who is without sin among you be the first to cast a stone at her.”
7 ஆனால், அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்று அவர்களிடம் கூறினார்.

8καὶ πάλιν κάτω¦κύψας ἔγραφεν εἰς τὴν γῆν

8 அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
8 And again He bent down and wrote on the ground.
8 மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.

9δὲ Οἱ ἀκούσαντες ἐξήρχοντο εἷς καθ‿ εἷς ἀρξάμενοι ἀπὸ τῶν πρεσβυτέρων 〈ἕως τῶν ἐσχάτων〉 καὶ 〈ὁ μόνος Ἰησοῦς〉 κατελείφθη καὶ ἡ γυνὴ οὖσα* ἐν μέσῳ

9 அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.
9 When they heard this,b they began to go away one by one, beginning with the older ones, until only Jesus was left, with the woman standing there.
9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.

10δὲ ὁ Ἰησοῦς ἀνακύψας εἶπεν αὐτῇ 〈Ἡ〉 Γύναι* ποῦ εἰσιν σου〉 〈ἐκεῖνοι οἱ κατήγοροί οὐδείς κατέκρινεν σε

10 இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேரொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
10 Then Jesus straightened up and asked her, “Woman, where are your accusers?d Has no one condemned you?”
10 இயேசு நிமிர்ந்து பார்த்து, "அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" என்று கேட்டார்.

11Οὐδείς κύριε δὲ Ἡ εἶπεν Οὐδὲ ἐγώ κατακρίνω σε δὲ 〈αὐτῇ〉 ὁ Ἰησοῦς Εἶπεν* [ἀπὸ τοῦ νῦν] πορεύου καὶ ἁμάρτανε μηκέτι

11 அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
11 “No one, Lord,” she answered. “Then neither do I condemn you,” Jesus declared. “Now go and sin no more.”
11 அவர், "இல்லை, ஐயா" என்றார். இயேசு அவரிடம் "நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்.]2

2 :11 - அடைப்புக் குறிக்குள் உள்ள இவ்வசனங்கள் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.

Jesus the Light of the World (1 John 1:5–10)

12Πάλιν οὖν ὁ Ἰησοῦς ἐλάλησεν αὐτοῖς λέγων Ἐγώ εἰμι τὸ φῶς τοῦ κόσμου ὁ ἀκολουθῶν ἐμοὶ* οὐ μὴ περιπατήσῃ ἐν τῇ σκοτίᾳ ἀλλ’ ἕξει τὸ φῶς τῆς ζωῆς

12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
12 Once again, Jesus spoke to the people and said, “I am the light of the world. Whoever follows Me will never walk in the darkness, but will have the light of life.”
12 மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, "உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்றார்.3

13οὖν οἱ Φαρισαῖοι Εἶπον αὐτῷ Σὺ μαρτυρεῖς περὶ σεαυτοῦ σου ἡ μαρτυρία ἔστιν οὐκ ἀληθής

13 அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக் குறித்து நீயே சாட்சிகொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
13 So the Pharisees said to Him, “You are testifying about Yourself; Your testimony is not valid.”
13 பரிசேயர் அவரிடம், "உம்மைப்பற்றி நீரே சான்று பகர்கிறீர்; உம் சான்று செல்லாது" என்றனர்.

14Ἰησοῦς Ἀπεκρίθη καὶ εἶπεν αὐτοῖς Κἂν ἐγὼ μαρτυρῶ περὶ ἐμαυτοῦ μου ἡ μαρτυρία ἐστιν ἀληθής ὅτι οἶδα πόθεν ἦλθον καὶ ποῦ ὑπάγω δὲ ὑμεῖς οὐκ οἴδατε πόθεν ἔρχομαι ἢ ποῦ ὑπάγω

14 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.
14 Jesus replied, “Even if I testify about Myself, My testimony is valid, because I know where I came from and where I am going. But you do not know where I came from or where I am going.
14 அதற்கு இயேசு, "என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தாலும் என் சான்று செல்லும். ஏனெனில், நான் எங்கிருந்து வந்தேன், எங்குச் செல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன், எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது.

15Ὑμεῖς κρίνετε κατὰ τὴν σάρκα ἐγὼ κρίνω οὐ οὐδένα

15 நீங்கள் மாம்சத்துச்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;
15 You judge according to the flesh; I judge no one.
15 நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை.

16δὲ καὶ ἐὰν ἐγώ κρίνω ἐμὴ ἡ κρίσις ἐστιν ἡ ἀληθινή ὅτι εἰμί οὐκ μόνος ἀλλ’ ἐγὼ καὶ ὁ ‹πατήρ› πέμψας με

16 நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
16 But even if I do judge, My judgment is true, because I am not alone; I am with the Father who sent Me.e
16 ஆனால், நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும். ஏனெனில், நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார்.4

17δὲ Καὶ ἐν τῷ ὑμετέρῳ τῷ νόμῳ γέγραπται ὅτι ἡ μαρτυρία δύο ἀνθρώπων ἐστιν ἀληθής

17 இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.
17 Even in your own Law it is written that the testimony of two men is valid.
17 இருவருடைய சான்று செல்லும் என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளது அல்லவா?5

18ἐγώ εἰμι ὁ μαρτυρῶν περὶ ἐμαυτοῦ καὶ ὁ Πατήρ πέμψας με μαρτυρεῖ περὶ ἐμοῦ

18 நான் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார்.
18 I am One who testifies about Myself, and the Father, who sent Me, also testifies about Me.”
18 என்னைப் பற்றி நானும் சான்று பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்" என்றார்.

19Ποῦ ἐστιν σου ὁ Πατήρ οὖν Ἔλεγον αὐτῷ οἴδατε Οὔτε ἐμὲ οὔτε μου τὸν Πατέρα Ἰησοῦς Ἀπεκρίθη εἰ ᾔδειτε ἐμὲ ἂν ᾔδειτε μου τὸν Πατέρα καὶ

19 அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.
19 “Where is Your Father?” they asked Him. “You do not know Me or My Father,” Jesus answered. “If you knew Me, you would know My Father as well.”
19 அப்போது அவர்கள், "உம் தந்தை எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, "உங்களுக்கு என்னையும் தெரியாது; என் தந்தையையும் தெரியாது. என்னை உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை என் தந்தையையும் தெரிந்திருக்கும்" என்றார்.

20ἐλάλησεν Ταῦτα τὰ ῥήματα διδάσκων ἐν τῷ ἱερῷ ἐν τῷ γαζοφυλακίῳ καὶ οὐδεὶς ἐπίασεν αὐτόν ὅτι αὐτοῦ ἡ ὥρα οὔπω ἐληλύθει

20 தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
20 He spoke these words while teaching in the temple courts, near the treasury. Yet no one seized Him, because His hour had not yet come.
20 கோவிலில் காணிக்கைப் பெட்டி அருகிலிருந்து இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு சொன்னார். அவரது நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைப் பிடிக்கவில்லை.

21οὖν πάλιν Εἶπεν αὐτοῖς Ἐγὼ ὑπάγω καὶ ζητήσετέ με καὶ ἀποθανεῖσθε ἐν ὑμῶν τῇ ἁμαρτίᾳ ὅπου ἐγὼ ὑπάγω ὑμεῖς οὐ δύνασθε ἐλθεῖν

21 இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார்.
21 Again He said to them, “I am going away, and you will look for Me, but you will die in your sin. Where I am going, you cannot come.”
21 இயேசு மீண்டும் அவர்களிடம், "நான் போன பின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்" என்றார்.

22οὖν οἱ Ἰουδαῖοι Ἔλεγον Μήτι ἀποκτενεῖ ἑαυτὸν ὅτι λέγει Ὅπου ἐγὼ ὑπάγω ὑμεῖς οὐ δύνασθε ἐλθεῖν

22 அப்பொழுது யூதர்கள்: நான்போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்கிறானே; தன்னைத்தான் கொலைசெய்துகொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள்.
22 So the Jews began to ask, “Will He kill Himself, since He says, ‘Where I am going, you cannot come’?”
22 யூதர்கள், "'நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது' என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ?" என்று பேசிக்கொண்டார்கள்.

23Καὶ ἔλεγεν αὐτοῖς Ὑμεῖς ἐστέ ἐκ τῶν κάτω ἐγὼ εἰμί ἐκ τῶν ἄνω ὑμεῖς ἐστέ ἐκ τούτου τοῦ κόσμου ἐγὼ εἰμὶ οὐκ ἐκ τούτου τοῦ κόσμου

23 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல.
23 Then He told them, “You are from below; I am from above. You are of this world; I am not of this world.
23 இயேசு அவர்களிடம், "நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால், நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல.

24οὖν εἶπον ὑμῖν ὅτι ἀποθανεῖσθε ἐν ὑμῶν ταῖς ἁμαρτίαις γὰρ ἐὰν μὴ πιστεύσητε ὅτι ἐγώ εἰμι ἀποθανεῖσθε ἐν ὑμῶν ταῖς ἁμαρτίαις

24 ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
24 That is why I told you that you would die in your sins. For unless you believe that I am He, you will die in your sins.”
24 ஆகவேதான், நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். 'இருக்கிறவர் நானே' என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்" என்றார்.

25τίς εἶ Σὺ οὖν Ἔλεγον αὐτῷ καὶ ὅ¦τι λαλῶ ὑμῖν Τὴν ἀρχὴν ὁ Ἰησοῦς Εἶπεν αὐτοῖς

25 அதற்கு அவர்கள் நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.
25 “Who are You?” they asked. “Just what I have been telling you from the beginning,” Jesus replied.
25 அவர்கள், "நீர் யார்?" என்று அவரிடம் கேட்டார்கள். அவர், "நான் யாரென்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன்.6

6 "நான் சொல்லி வந்துள்ளேன்" என்னும் சொற்றொடரை "நான் உங்களிடம் ஏன் பேச வேண்டும்?" எனவும் மொழிபெயர்க்கலாம்.

26ἔχω πολλὰ λαλεῖν περὶ ὑμῶν καὶ κρίνειν ἀλλ’ ὁ πέμψας με ἐστιν ἀληθής κἀγὼ ἃ ἤκουσα παρ’ αὐτοῦ ταῦτα λαλῶ εἰς τὸν κόσμον

26 உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்.
26 “I have much to say about you and much to judge. But the One who sent Me is truthful, and what I have heard from Him, I tell the world.”
26 உங்களைப் பற்றிப் பேசுவதற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு. ஆனால், என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்" என்றார்.

27Οὐκ ἔγνωσαν ὅτι ἔλεγεν αὐτοῖς τὸν Πατέρα

27 பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
27 They did not understand that He was telling them about the Father.
27 தந்தையைப்பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.

28οὖν ὁ Ἰησοῦς εἶπεν [αὐτοῖς] Ὅταν ὑψώσητε τὸν Υἱὸν τοῦ ἀνθρώπου τότε γνώσεσθε ὅτι ἐγώ εἰμι καὶ ποιῶ οὐδέν ἀπ’ ἐμαυτοῦ ἀλλὰ λαλῶ καθὼς ταῦτα ὁ Πατὴρ ἐδίδαξέν με

28 ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
28 So Jesus said, “When you have lifted up the Son of Man, then you will know that I am He, and that I do nothing on My own, but speak exactly what the Father has taught Me.
28 இயேசு அவர்களிடம், "நீங்கள் மானிட மகனை உயர்த்திய பின்பு, 'இருக்கிறவர் நானே'; நானாக எதையும் செய்வதில்லை; மாறாகத் தந்தை கற்றுத் தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

29καὶ ὁ πέμψας με ἐστιν μετ’ ἐμοῦ οὐκ ἀφῆκέν με μόνον ὅτι ἐγὼ πάντοτε ποιῶ τὰ ἀρεστὰ αὐτῷ

29 என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
29 He who sent Me is with Me. He has not left Me alone, because I always do what pleases Him.”
29 என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்" என்றார்.7

The Truth Will Set You Free (2 John 1:4–6)

30αὐτοῦ λαλοῦντος Ταῦτα πολλοὶ ἐπίστευσαν εἰς αὐτόν

30 இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
30 As Jesus spoke these things, many believed in Him.
30 அவர் இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

31οὖν ὁ Ἰησοῦς Ἔλεγεν πρὸς τοὺς Ἰουδαίους πεπιστευκότας αὐτῷ Ἐὰν ὑμεῖς μείνητε ἐν τῷ ἐμῷ τῷ λόγῳ ἐστε ἀληθῶς μού μαθηταί

31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
31 So He said to the Jews who had believed Him, “If you continue in My word, you are truly My disciples.
31 இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, "என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்;

32καὶ γνώσεσθε τὴν ἀλήθειαν καὶ ἡ ἀλήθεια ἐλευθερώσει ὑμᾶς

32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
32 Then you will know the truth, and the truth will set you free.”
32 உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்" என்றார்.8

33ἐσμεν Ἀβραάμ Σπέρμα Ἀπεκρίθησαν πρὸς αὐτόν καὶ δεδουλεύκαμεν πώποτε οὐδενὶ πῶς σὺ λέγεις ὅτι γενήσεσθε Ἐλεύθεροι

33 அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.
33 “We are Abraham’s descendants,” they answered. “We have never been slaves to anyone. How can You say we will be set free?”
33 யூதர்கள் அவரைப் பார்த்து," 'உங்களுக்கு விடுதலை கிடைக்கும்' என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!" என்றார்கள்.

34ὁ Ἰησοῦς Ἀπεκρίθη αὐτοῖς Ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ὅτι πᾶς ὁ ποιῶν τὴν ἁμαρτίαν ἐστιν δοῦλός τῆς ἁμαρτίας

34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
34 Jesus replied, “Truly, truly, I tell you, everyone who sins is a slave to sin.
34 அதற்கு இயேசு, "பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.9

35δὲ ὁ δοῦλος οὐ εἰς τὸν αἰῶνα μένει ἐν τῇ οἰκίᾳ ὁ υἱὸς μένει εἰς τὸν αἰῶνα

35 அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.
35 A slave is not a permanent member of the family, but a son belongs to it forever.
35 வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு.

36οὖν ἐὰν ὁ Υἱὸς ὑμᾶς ἐλευθερώσῃ ἔσεσθε ἐλεύθεροι ὄντως

36 ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்,
36 So if the Son sets you free, you will be free indeed.
36 மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள்.10

37Οἶδα ὅτι ἐστε Ἀβραάμ σπέρμα ἀλλὰ ζητεῖτέ ἀποκτεῖναι με ὅτι ὁ ἐμὸς ὁ λόγος οὐ χωρεῖ ἐν ὑμῖν

37 நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.
37 I know you are Abraham’s descendants, but you are trying to kill Me because My word has no place within you.
37 நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள்.

38λαλῶ ἃ ἐγὼ ἑώρακα παρὰ τῷ Πατρὶ καὶ οὖν ὑμεῖς ποιεῖτε ἃ ἠκούσατε παρὰ τοῦ πατρὸς

38 நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்.
38 I speak of what I have seen in the presence of the Father, and you do what you have heard from your father.”
38 நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்" என்றார்.

39Ἀβραάμ ἐστιν ἡμῶν Ὁ πατὴρ Ἀπεκρίθησαν καὶ εἶπαν αὐτῷ Εἰ ἐστε τέκνα τοῦ Ἀβραάμ Λέγει αὐτοῖς ὁ Ἰησοῦς ἐποιεῖτε* τὰ ἔργα τοῦ Ἀβραὰμ

39 அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே.
39 “Abraham is our father,” they replied. “If you were children of Abraham,” said Jesus, “you would do the works of Abraham.
39 அவர்கள் அவரைப் பார்த்து, "ஆபிரகாமே எங்கள் தந்தை" என்றார்கள். இயேசு அவர்களிடம், "நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள்.

40δὲ νῦν ζητεῖτέ ἀποκτεῖναι με ἄνθρωπον ὃς λελάληκα ὑμῖν τὴν ἀλήθειαν ἣν ἤκουσα παρὰ τοῦ Θεοῦ Ἀβραὰμ οὐκ ἐποίησεν τοῦτο

40 தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
40 But now you are trying to kill Me, a man who has told you the truth that I heard from God. Abraham never did such a thing.
40 ஆனால், கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே!

41ὑμεῖς ποιεῖτε τὰ ἔργα τοῦ ὑμῶν πατρὸς Ἡμεῖς ‹οὐ γεγεννήμεθα› ἐκ πορνείας [οὖν] Εἶπαν αὐτῷ ἔχομεν ἕνα Πατέρα τὸν Θεόν

41 நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன் என்றார்கள்.
41 You are doing the works of your father.” “We are not illegitimate children,” they declared. “Our only Father is God Himself.”
41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள்" என்றார். அவர்கள், "நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர்" என்றார்கள்.

42ὁ Ἰησοῦς Εἶπεν αὐτοῖς Εἰ ὁ Θεὸς ἦν ὑμῶν Πατὴρ ἂν ἠγαπᾶτε ἐμέ γὰρ ἐγὼ ἐξῆλθον ἥκω ἐκ τοῦ Θεοῦ καὶ γὰρ ἐλήλυθα οὐδὲ ἀπ’ ἐμαυτοῦ ἀλλ’ ἐκεῖνός ἀπέστειλεν με

42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
42 Jesus said to them, “If God were your Father, you would love Me, for I have come here from God. I have not come on My own, but He sent Me.
42 இயேசு அவர்களிடம் கூறியது: "கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.

43Διὰ τί οὐ γινώσκετε τὴν ἐμὴν τὴν λαλιὰν ὅτι οὐ δύνασθε ἀκούειν τὸν ἐμόν τὸν λόγον

43 என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
43 Why do you not understand what I am saying? It is because you are unable to accept My message.
43 நான் சொல்வதற்குச் செவி சாய்க்க உங்களால் இயலவில்லை. எனவேதான் நான் சொல்வதை நீங்கள் கண்டுணர்வதில்லை.

44ὑμεῖς ἐστὲ ἐκ τοῦ πατρὸς τοῦ διαβόλου καὶ θέλετε ποιεῖν τὰς τοῦ ὑμῶν πατρὸς ἐπιθυμίας ἐκεῖνος ἦν ἀνθρωποκτόνος ἀπ’ ἀρχῆς καὶ οὐκ ἔστηκεν ἐν τῇ ἀληθείᾳ ὅτι ἔστιν οὐκ ἀλήθεια ἐν αὐτῷ ὅταν λαλῇ τὸ ψεῦδος λαλεῖ ἐκ τῶν ἰδίων ὅτι ἐστὶν ψεύστης καὶ ὁ πατὴρ αὐτοῦ

44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
44 You belong to your father, the devil, and you want to carry out his desires. He was a murderer from the beginning, refusing to uphold the truth, because there is no truth in him. When he lies, he speaks his native language, because he is a liar and the father of lies.
44 சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி. அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும்போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில் ,அவன் பொய்யன், பொய்ம்மையின் பிறப்பிடம்.11

45δὲ ὅτι ἐγὼ λέγω τὴν ἀλήθειαν οὐ πιστεύετέ μοι

45 நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.
45 But because I speak the truth, you do not believe Me!
45 நான் உண்மையைக் கூறுவதால் நீங்கள் என்னை நம்புவதில்லை.

46Τίς ἐξ ὑμῶν ἐλέγχει με περὶ ἁμαρτίας εἰ λέγω ἀλήθειαν διὰ τί ὑμεῖς οὐ πιστεύετέ μοι

46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.
46 Which of you can prove Me guilty of sin? If I speak the truth, why do you not believe Me?
46 என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது என்மேல் குற்றம் சுமத்த முடியுமா? நான் உங்களிடம் உண்மையைக் கூறியும் நீங்கள் ஏன் என்னை நம்புவதில்லை?12

47ὁ ὢν ἐκ τοῦ Θεοῦ ἀκούει τὰ ῥήματα τοῦ Θεοῦ διὰ τοῦτο ὑμεῖς οὐκ ἀκούετε ὅτι ἐστέ οὐκ ἐκ τοῦ Θεοῦ

47 தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.
47 Whoever belongs to God hears the words of God. The reason you do not hear is that you do not belong to God.”
47 கடவுளைச் சார்ந்தவர் கடவுளிள் சொல்லுக்குச் செவிசாய்க்கிறார்; நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் அவர் சொல்லுக்குச் செவி சாய்ப்பதில்லை."

Before Abraham Was Born, I Am

48οἱ Ἰουδαῖοι Ἀπεκρίθησαν καὶ εἶπαν αὐτῷ Οὐ ἡμεῖς καλῶς λέγομεν ὅτι σὺ εἶ Σαμαρίτης καὶ ἔχεις δαιμόνιον

48 அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.
48 The Jews answered Him, “Are we not right to say that You are a Samaritan and You have a demon?”
48 யூதர்கள் இயேசுவைப் பார்த்து," நீ சமாரியன், பேய் பிடித்தவன் என நாங்கள் சொல்வது சரிதானே?" என்றார்கள்.

49Ἐγὼ οὐκ ἔχω δαιμόνιον Ἰησοῦς Ἀπεκρίθη ἀλλὰ τιμῶ μου τὸν Πατέρα καὶ ὑμεῖς ἀτιμάζετέ με

49 அதற்கு இயேசு: நான் பிசாசுபிடித்தவனல்ல, நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன், நீங்கள் என்னைக் கனவீனம் பண்ணுகிறீர்கள்.
49 “I do not have a demon,” Jesus replied, “but I honor My Father, and you dishonor Me.
49 அதற்கு இயேசு, "நான் பேய் பிடித்தவன் அல்ல; என் தந்தைக்கு மதிப்பளிப்பவன். ஆனால், நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள்.

50δὲ ἐγὼ οὐ ζητῶ μου τὴν δόξαν ἔστιν ὁ ζητῶν καὶ κρίνων

50 நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.
50 I do not seek My own glory. There is One who seeks it, and He is the Judge.
50 நான் எனக்குப் பெருமை தேடுவதில்லை. அதை எனக்குத் தேடித்தருபவர் ஒருவர் இருக்கிறார். அவரே தீர்ப்பளிப்பவர்.

51ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ἐάν τις τηρήσῃ ἐμὸν τὸν λόγον οὐ μὴ θεωρήσῃ εἰς τὸν αἰῶνα θάνατον

51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
51 Truly, truly, I tell you, if anyone keeps My word, he will never see death.”
51 என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

52Νῦν ἐγνώκαμεν ὅτι ἔχεις δαιμόνιον οὖν] [Εἶπον αὐτῷ οἱ Ἰουδαῖοι Ἀβραὰμ ἀπέθανεν καὶ οἱ προφῆται καὶ σὺ λέγεις Ἐάν τις τηρήσῃ μου τὸν λόγον οὐ μὴ γεύσηται εἰς τὸν αἰῶνα θανάτου

52 அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசு பிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள் நீயோ ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்.
52 “Now we know that You have a demon!” declared the Jews. “Abraham died, and so did the prophets, yet You say that anyone who keeps Your word will never taste death.
52 யூதர்கள் அவரிடம், "நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால், என் வார்த்தையைக் கடைப் பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே!

53εἶ σὺ μὴ μείζων ἡμῶν τοῦ πατρὸς Ἀβραάμ ὅστις ἀπέθανεν καὶ οἱ προφῆται ἀπέθανον τίνα ποιεῖς σεαυτὸν

53 எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்.
53 Are You greater than our father Abraham? He died, as did the prophets. Who do You claim to be?”
53 எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்றார்கள்.

54Ἰησοῦς Ἀπεκρίθη Ἐὰν ἐγὼ δοξάσω ἐμαυτόν μου ἡ δόξα ἐστιν οὐδέν ὁ δοξάζων με ἔστιν μου ὁ Πατήρ ὃν ὑμεῖς λέγετε ὅτι ἐστιν ἡμῶν Θεὸς

54 இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
54 Jesus answered, “If I glorify Myself, My glory means nothing. The One who glorifies Me is My Father, of whom you say ‘He is ourg God.’
54 இயேசு மறுமொழியாக, "நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள்.

55καὶ οὐκ ἐγνώκατε αὐτόν δὲ ἐγὼ οἶδα αὐτόν κἂν εἴπω ὅτι οὐκ οἶδα αὐτόν ἔσομαι ψεύστης ὅμοιος ὑμῖν ἀλλὰ οἶδα αὐτὸν καὶ τηρῶ αὐτοῦ τὸν λόγον

55 ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.
55 You do not know Him, but I know Him. If I said I did not know Him, I would be a liar like you. But I do know Him, and I keep His word.
55 ஆனால், அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைபிடிக்கிறேன்.

56ὑμῶν ὁ πατὴρ Ἀβραὰμ ἠγαλλιάσατο ἵνα ἴδῃ τὴν ἐμήν τὴν ἡμέραν καὶ εἶδεν καὶ ἐχάρη

56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.
56 Your father Abraham rejoiced that he would see My day. He saw it and was glad.”
56 உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்" என்றார்.

57οὖν οἱ Ἰουδαῖοι Εἶπον* πρὸς αὐτόν ἔχεις οὔπω Πεντήκοντα ἔτη καὶ ἑώρακας Ἀβραὰμ

57 அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
57 Then the Jews said to Him, “You are not yet fifty years old, and You have seen Abraham?”
57 யூதர்கள் அவரை நோக்கி, "உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள்

58Ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν Ἰησοῦς Εἶπεν αὐτοῖς πρὶν Ἀβραὰμ γενέσθαι ἐγὼ εἰμί

58 அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
58 “Truly, truly, I tell you,” Jesus declared, “before Abraham was born, I am!”h
58 இயேசு அவர்களிடம், "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

59οὖν Ἦραν λίθους ἵνα βάλωσιν ἐπ’ αὐτόν δὲ Ἰησοῦς ἐκρύβη καὶ ἐξῆλθεν ἐκ τοῦ ἱεροῦ

59 அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.
59 At this, they picked up stones to throw at Him. But Jesus was hidden and went out of the temple area.i
59 இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால், இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

John Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
2 a Literally the temple ; also in verse 20
9 b NE, BYZ, and TR include and were convicted by their conscience,
10 c NE, BYZ, and TR include and saw no one but the woman .
10 d WH and NA where are they
16 e Literally but (it is) I and the Father who sent Me ; NE but (it is) I and the One who sent Me
17 f See Deuteronomy 19:15.
54 g WH and TR Your
58 h Literally before Abraham was, I am!
59 i BYZ and TR include going through the midst of them, and so He passed by .

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.