பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

John  யோவான்  Ἰωάννην

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

யோவான் 4 | John 4

Jesus and the Samaritan Woman

1οὖν Ὡς ὁ Ἰησοῦς* ἔγνω ὅτι οἱ Φαρισαῖοι ἤκουσαν ὅτι Ἰησοῦς ποιεῖ καὶ βαπτίζει πλείονας μαθητὰς ἢ Ἰωάννης

1 யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,
1 When Jesus realized that the Pharisees were aware Hea was gaining and baptizing more disciples than John
1 யோவானைவிட இயேசு மிகுதியான சீடர்களைச் சேர்த்துக் கொண்டு திருமுழுக்குக் கொடுத்துவருகிறார் என்று பரிசேயர் கேள்வியுற்றனர். இதை அறிந்த இயேசு

2καίτοιγε οὐκ Ἰησοῦς αὐτὸς ἐβάπτιζεν ἀλλ’ αὐτοῦ οἱ μαθηταὶ

2 யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார்.
2 (although it was not Jesus who baptized, but His disciples),
2 யூதேயாவை விட்டகன்று மீண்டும் கலிலேயாவுக்குச் சென்றார்.

3ἀφῆκεν τὴν Ἰουδαίαν καὶ ἀπῆλθεν πάλιν εἰς τὴν Γαλιλαίαν

3 இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்.
3 He left Judea and returned to Galilee.
3 ஆனால், உண்மையில் திருமுழுக்குக் கொடுத்தவர் இயேசு அல்ல; அவருடைய சீடர்களே.

4δὲ αὐτὸν Ἔδει διέρχεσθαι διὰ τῆς Σαμαρείας

4 அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தபடியால்,
4 Now He had to pass through Samaria.
4 கலிலேயாவுக்கு அவர் சமாரியா வழியாகச் செல்லவேண்டியிருந்தது.

5οὖν ἔρχεται εἰς πόλιν τῆς Σαμαρείας λεγομένην Συχὰρ πλησίον τοῦ χωρίου ὃ Ἰακὼβ ἔδωκεν ‹τῷ› αὐτοῦ τῷ υἱῷ Ἰωσὴφ

5 யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார்.
5 So He came to a town of Samaria called Sychar, near the plot of ground that Jacob had given to his son Joseph.
5 அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது.1

6δὲ τοῦ Ἰακώβ πηγὴ ἦν ἐκεῖ ὁ οὖν Ἰησοῦς κεκοπιακὼς ἐκ τῆς ὁδοιπορίας οὕτως ἐκαθέζετο ἐπὶ τῇ πηγῇ ἦν ὡς ἕκτη ὥρα

6 அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது.
6 Since Jacob’s well was there, Jesus, weary from His journey, sat down by the well. It was about the sixth hour.b
6 அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.

7ἐκ τῆς Σαμαρείας γυνὴ Ἔρχεται ἀντλῆσαι ὕδωρ ὁ Ἰησοῦς λέγει αὐτῇ Δός μοι πεῖν

7 அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்.
7 When a Samaritan woman came to draw water, Jesus said to her, “Give Me a drink.”
7 ❮7-8❯அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம், "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" என்று கேட்டார்.

8γὰρ αὐτοῦ οἱ μαθηταὶ ἀπεληλύθεισαν εἰς τὴν πόλιν ἵνα ἀγοράσωσιν τροφὰς

8 அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார்.
8 (His disciples had gone into the town to buy food.)

9ὢν Ἰουδαῖος οὖν Λέγει ἡ ἡ Σαμαρῖτις γυνὴ αὐτῷ Πῶς σὺ αἰτεῖς πεῖν παρ’ ἐμοῦ οὔσης Σαμαρίτιδος γυναικὸς γὰρ Ἰουδαῖοι οὐ συνχρῶνται Σαμαρίταις

9 யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரிய ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
9 “You are a Jew,” said the woman. “How can You ask for a drink from me, a Samaritan woman?” (For Jews do not associate with Samaritans.)c
9 அச் சமாரியப் பெண் அவரிடம், "நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?" என்று கேட்டார். ஏனெனில், யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை.2

2 "யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை" என்னும் சொற்றொடரை, "சமாரியர் பயன்படுத்தும் பாத்திரங்களை யூதர்கள் பயன்படுத்துவதில்லை" எனவும் மொழிபெயர்க்கலாம்.

10Ἰησοῦς Ἀπεκρίθη καὶ εἶπεν αὐτῇ Εἰ ᾔδεις τὴν δωρεὰν τοῦ Θεοῦ καὶ τίς ἐστιν ὁ λέγων σοι Δός μοι πεῖν σὺ ἂν ᾔτησας αὐτὸν καὶ ἄν ἔδωκεν σοι ζῶν ὕδωρ

10 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
10 Jesus answered, “If you knew the gift of God and who is asking you for a drink, you would have asked Him, and He would have given you living water.”
10 இயேசு அவரைப் பார்த்து, "கடவுளுடைய கொடை எது என்பதையும் 'குடிக்கத் தண்ணீர் கொடும்' எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்" என்றார்.

11Κύριε ‹ἡ γυνή› Λέγει αὐτῷ ἔχεις οὔτε ἄντλημα καὶ τὸ φρέαρ ἐστὶν βαθύ πόθεν οὖν ἔχεις τὸ τὸ ζῶν ὕδωρ

11 அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.
11 “Sir,” the woman replied, “You have nothing to draw with and the well is deep. Where then will You get this living water?
11 அவர் இயேசுவிடம், "ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?

12εἶ μὴ σὺ μείζων ἡμῶν τοῦ πατρὸς Ἰακώβ ὃς ἔδωκεν ἡμῖν τὸ φρέαρ καὶ ἔπιεν ἐξ αὐτοῦ αὐτὸς καὶ αὐτοῦ οἱ υἱοὶ καὶ αὐτοῦ τὰ θρέμματα

12 இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ. அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள்.
12 Are You greater than our father Jacob, who gave us this well and drank from it himself, as did his sons and his livestock?”
12 எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்" என்றார்.

13Ἰησοῦς Ἀπεκρίθη καὶ εἶπεν αὐτῇ Πᾶς ὁ πίνων ἐκ τούτου τοῦ ὕδατος διψήσει πάλιν

13 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.
13 Jesus said to her, “Everyone who drinks this water will be thirsty again.
13 இயேசு அவரைப் பார்த்து, "இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும்.

14δ’ ὃς ἂν πίῃ ἐκ τοῦ ὕδατος οὗ ἐγὼ δώσω αὐτῷ οὐ μὴ διψήσει εἰς τὸν αἰῶνα ἀλλὰ τὸ ὕδωρ ὃ δώσω αὐτῷ γενήσεται ἐν αὐτῷ πηγὴ ὕδατος ἁλλομένου εἰς αἰώνιον ζωὴν

14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
14 But whoever drinks the water I give him will never thirst. Indeed, the water I give him will become in him a fount of water springing up to eternal life.”
14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்" என்றார்.3

15ἡ γυνή Λέγει πρὸς αὐτὸν Κύριε δός μοι τοῦτο τὸ ὕδωρ ἵνα μὴ διψῶ μηδὲ διέρχωμαι ἐνθάδε ἀντλεῖν

15 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.
15 The woman said to Him, “Sir, give me this water so that I will not get thirsty and have to keep coming here to draw water.”
15 அப்பெண் அவரை நோக்கி, "ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது" என்றார்.

16Λέγει αὐτῇ Ὕπαγε φώνησον σου τὸν ἄνδρα καὶ ἐλθὲ ἐνθάδε

16 இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார்.
16 Jesus told her, “Go, call your husband and come back.”
16 இயேசு அவரிடம், "நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்" என்று கூறினார்.

17ἔχω Οὐκ ἄνδρα ἡ γυνὴ Ἀπεκρίθη καὶ εἶπεν ‹αὐτῷ› Ἰησοῦς Λέγει αὐτῇ ὁ εἶπας* Καλῶς ὅτι ἔχω οὐκ Ἄνδρα

17 அதற்கு அந்த ஸ்திரீ எனக்குப்புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான்.
17 “I have no husband,” the woman replied. Jesus said to her, “You are correct to say that you have no husband.
17 அப்பெண் அவரைப் பார்த்து, "எனக்குக் கணவர் இல்லையே" என்றார். இயேசு அவரிடம், "'எனக்குக் கணவர் இல்லை' என நீர் சொல்வது சரியே.

18γὰρ ἔσχες πέντε ἄνδρας καὶ ὃν ἔχεις νῦν ἔστιν οὐκ σου ἀνήρ τοῦτο εἴρηκας ἀληθὲς

18 எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
18 In fact, you have had five husbands, and the man you now have is not your husband. You have spoken truthfully.”
18 உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே, நீர் கூறியது உண்மையே" என்றார்.

19Κύριε ἡ γυνή Λέγει αὐτῷ θεωρῶ ὅτι σύ εἶ προφήτης

19 அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.
19 “Sir,” the woman said, “I see that You are a prophet.
19 அப்பெண் அவரிடம், "ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்.4

20ἡμῶν οἱ πατέρες προσεκύνησαν ἐν τούτῳ τῷ ὄρει καὶ ὑμεῖς λέγετε ὅτι ὁ τόπος ὅπου δεῖ προσκυνεῖν ἐστὶν ἐν Ἱεροσολύμοις

20 எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டு வந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
20 Our fathers worshiped on this mountain, but you Jews say that the place where one must worship is in Jerusalem.”
20 எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால், நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே" என்றார்.5

21Πίστευέ μοι γύναι ὁ Ἰησοῦς Λέγει αὐτῇ ὅτι ὥρα ἔρχεται ὅτε προσκυνήσετε τῷ Πατρί οὔτε ἐν τούτῳ τῷ ὄρει οὔτε ἐν Ἱεροσολύμοις

21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
21 “Believe Me, woman,” Jesus replied, “a time is coming when you will worship the Father neither on this mountain nor in Jerusalem.
21 இயேசு அவரிடம், "அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்.

22ὑμεῖς προσκυνεῖτε ὃ οὐκ οἴδατε ἡμεῖς προσκυνοῦμεν ὃ οἴδαμεν ὅτι ἡ σωτηρία ἐστίν ἐκ τῶν Ἰουδαίων

22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.
22 You worship what you do not know; we worship what we do know, for salvation is from the Jews.
22 யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால், நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.6

23ἀλλὰ ὥρα ἔρχεται καὶ νῦν ἐστιν ὅτε οἱ ἀληθινοὶ προσκυνηταὶ προσκυνήσουσιν τῷ Πατρὶ ἐν πνεύματι καὶ ἀληθείᾳ γὰρ καὶ ὁ Πατὴρ ζητεῖ τοιούτους τοὺς προσκυνοῦντας αὐτόν

23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
23 But a time is coming and has now come when the true worshipers will worship the Father in spirit and in truth, for the Father is seeking such as these to worship Him.
23 காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில்7 வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார்.

7 "அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்" என்னும் சொற்றொடரை "அவரது உண்மை இயல்புக்கேற்ப ஆவியாரோடு இணைந்து" எனவோ "உண்மையான உளப்பாங்குடன்" எனவோ மொழிபெயர்க்கலாம்.

24ὁ Θεός Πνεῦμα καὶ τοὺς προσκυνοῦντας δεῖ προσκυνεῖν ‹αὐτὸν› ἐν πνεύματι καὶ ἀληθείᾳ

24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
24 God is Spirit, and His worshipers must worship Him in spirit and in truth.”
24 கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்" என்றார்.

25ἡ γυνή Λέγει αὐτῷ Οἶδα ὅτι Μεσσίας ὁ λεγόμενος Χριστός ἔρχεται ὅταν ἐκεῖνος ἔλθῃ ἀναγγελεῖ ἅπαντα ἡμῖν

25 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
25 The woman said, “I know that Messiah” (called Christ) “is coming. When He comes, He will explain everything to us.”
25 அப்பெண் அவரிடம், "கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்" என்றார்.8

26ὁ Ἰησοῦς Λέγει αὐτῇ Ἐγώ ὁ λαλῶν σοι εἰμι

26 அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
26 Jesus answered, “I who speak to you am He.”
26 இயேசு அவரிடம், "உம்மோடு பேசும் நானே அவர்" என்றார்.

The Disciples Return and Marvel

27Καὶ ἐπὶ τούτῳ αὐτοῦ οἱ μαθηταὶ ἦλθαν καὶ ἐθαύμαζον ὅτι ἐλάλει μετὰ γυναικὸς μέντοι οὐδεὶς εἶπεν Τί ζητεῖς ἢ Τί λαλεῖς μετ’ αὐτῆς

27 அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.
27 Just then His disciples returned and were surprised that He was speaking with a woman. But no one asked Him, “What do You want from her?” or “Why are You talking with her?”
27 அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் "என்ன வேண்டும்?" என்றோ, "அவரோடு என்ன பேசுகிறீர்?" என்றோ எவரும் கேட்கவில்லை.

28οὖν ἡ γυνὴ Ἀφῆκεν αὐτῆς τὴν ὑδρίαν καὶ ἀπῆλθεν εἰς τὴν πόλιν καὶ λέγει τοῖς ἀνθρώποις

28 அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேபோய், ஜனங்களை நோக்கி:
28 Then the woman left her water jar, went back into the town, and said to the people,
28 அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம்,

29Δεῦτε ἴδετε ἄνθρωπον ὃς εἶπέν μοι πάντα ὅσα* ἐποίησα μήτι οὗτός ἐστιν ὁ Χριστός

29 நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.
29 “Come, see a man who told me everything I ever did. Could this be the Christ?”
29 "நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!" என்றார்.

30ἐξῆλθον ἐκ τῆς πόλεως καὶ ἤρχοντο πρὸς αὐτόν

30 அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.
30 So they left the town and made their way toward Jesus.
30 அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.

31Ἐν τῷ μεταξὺ οἱ μαθηταὶ ἠρώτων αὐτὸν λέγοντες Ῥαββί φάγε

31 இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
31 Meanwhile the disciples urged Him, “Rabbi, eat something.”
31 அதற்கிடையில் சீடர், "ரபி, உண்ணும்" என்று வேண்டினர்.

32δὲ Ὁ εἶπεν αὐτοῖς Ἐγὼ ἔχω βρῶσιν φαγεῖν ἣν ὑμεῖς οἴδατε οὐκ

32 அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.
32 But He told them, “I have food to eat that you know nothing about.”
32 இயேசு அவர்களிடம், "நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது" என்றார்.

33οὖν οἱ μαθηταὶ Ἔλεγον πρὸς ἀλλήλους Μή τις ἤνεγκεν αὐτῷ φαγεῖν

33 அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள்.
33 So the disciples asked one another, “Could someone have brought Him food?”
33 "யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ" என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

34ὁ Ἰησοῦς Λέγει αὐτοῖς Ἐμὸν βρῶμά ἐστιν ἵνα ποιήσω* τὸ θέλημα τοῦ πέμψαντός με καὶ τελειώσω αὐτοῦ τὸ ἔργον

34 இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
34 Jesus explained, “My food is to do the will of Him who sent Me and to finish His work.
34 இயேசு அவர்களிடம், "என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.9

35ὑμεῖς οὐχ λέγετε ὅτι ἐστιν Ἔτι τετράμηνός καὶ ἔρχεται ὁ θερισμὸς ἰδοὺ λέγω ὑμῖν ἐπάρατε ὑμῶν τοὺς ὀφθαλμοὺς καὶ θεάσασθε τὰς χώρας ὅτι εἰσιν ἤδη λευκαί πρὸς θερισμόν

35 அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
35 Do you not say, ‘There are still four months until the harvest’? I tell you, lift up your eyes and look at the fields, for they are riped for harvest.
35 'நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை' என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது.10

36Ὁ θερίζων λαμβάνει μισθὸν καὶ συνάγει καρπὸν εἰς αἰώνιον ζωὴν ἵνα ὁ σπείρων καὶ ὁ θερίζων χαίρῃ ὁμοῦ

36 விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.
36 Already the reaper draws his wages and gathers a crop for eternal life, so that the sower and the reaper may rejoice together.
36 அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக்11 கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர்.

11 "மக்கள்" என்பதற்கான மூலமொழிச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு "விளைச்சல்" என்பதாகும்.

37γὰρ ἐν τούτῳ ὁ λόγος ὅτι ἐστὶν Ἄλλος ὁ σπείρων καὶ ἄλλος ὁ θερίζων ἐστὶν ἀληθινὸς

37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது.
37 For in this case the saying ‘One sows and another reaps’ is true.
37 ❮37-38❯நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால், நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள். இவ்வாறு 'விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்' என்னும் கூற்று உண்மையாயிற்று" என்றார்.12

38ἐγὼ ἀπέστειλα ὑμᾶς θερίζειν ὃ ὑμεῖς οὐχ κεκοπιάκατε ἄλλοι κεκοπιάκασιν καὶ ὑμεῖς εἰσεληλύθατε εἰς αὐτῶν τὸν κόπον

38 நீங்கள் பிரயரசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.
38 I sent you to reap what you have not worked for; others have done the hard work, and now you have taken up their labor.”

Many Samaritans Believe

39δὲ πολλοὶ τῶν Σαμαριτῶν Ἐκ ἐκείνης τῆς πόλεως ἐπίστευσαν εἰς αὐτὸν διὰ τὸν λόγον τῆς γυναικὸς μαρτυρούσης ὅτι Εἶπέν μοι πάντα ἃ ἐποίησα

39 நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
39 Many of the Samaritans from that town believed in Jesus because of the woman’s testimony, “He told me everything I ever did.”
39 "நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்" என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.

40οὖν ὡς οἱ Σαμαρῖται ἦλθον πρὸς αὐτὸν ἠρώτων αὐτὸν μεῖναι παρ’ αὐτοῖς καὶ ἔμεινεν ἐκεῖ δύο ἡμέρας

40 சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார்.
40 So when the Samaritans came to Him, they asked Him to stay with them, and He stayed two days.
40 சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார்.

41Καὶ πολλῷ πλείους ἐπίστευσαν διὰ αὐτοῦ τὸν λόγον

41 அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து,
41 And many more believed because of His message.
41 அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர்.

42τε ἔλεγον τῇ γυναικὶ ὅτι πιστεύομεν Οὐκέτι διὰ τὴν σὴν λαλιὰν ἀκηκόαμεν γὰρ αὐτοὶ καὶ οἴδαμεν ὅτι οὗτός ἀληθῶς ἐστιν ὁ Σωτὴρ τοῦ κόσμου

42 அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
42 They said to the woman, “We now believe not only because of your words; we have heard for ourselves, and we know that this man truly is the Savior of the world.”
42 அவர்கள் அப்பெண்ணிடம், "இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்" என்றார்கள்.

Jesus Heals the Official’s Son (Matthew 8:5–13; Luke 7:1–10)

43δὲ Μετὰ τὰς δύο ἡμέρας ἐξῆλθεν ἐκεῖθεν εἰς τὴν Γαλιλαίαν

43 இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவுக்குப் போனார்.
43 After two days, Jesus left for Galilee.
43 அந்த இரண்டு நாட்க‌ளுக்குப் பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்றார்.

44γὰρ Ἰησοῦς αὐτὸς ἐμαρτύρησεν ὅτι προφήτης ἔχει οὐκ τιμὴν ἐν τῇ ἰδίᾳ πατρίδι

44 ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார்.
44 Now He Himself had testified that a prophet has no honor in his own hometown.
44 தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார்.13

45οὖν ὅτε ἦλθεν εἰς τὴν Γαλιλαίαν οἱ Γαλιλαῖοι ἐδέξαντο αὐτὸν ἑωρακότες πάντα ὅσα ἐποίησεν ἐν Ἱεροσολύμοις ἐν τῇ ἑορτῇ γὰρ αὐτοὶ ἦλθον εἰς τὴν ἑορτήν καὶ

45 அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள்.
45 Yet when He arrived, the Galileans welcomed Him. They had seen all the great things He had done in Jerusalem at the feast, for they had gone there as well.
45 அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில், அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.14

46οὖν πάλιν Ἦλθεν εἰς τὴν Κανὰ τῆς Γαλιλαίας ὅπου ἐποίησεν τὸ ὕδωρ οἶνον Καὶ ἦν τις βασιλικὸς οὗ ὁ υἱὸς ἠσθένει ἐν Καφαρναούμ

46 பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான்.
46 So once again He came to Cana in Galilee, where He had turned the water into wine. And there was a royal official whose son lay sick at Capernaum.
46 கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான்.15

47οὗτος ἀκούσας ὅτι Ἰησοῦς ἥκει ἐκ τῆς Ἰουδαίας εἰς τὴν Γαλιλαίαν ἀπῆλθεν καὶ ἠρώτα πρὸς αὐτὸν ἵνα καταβῇ καὶ ἰάσηται αὐτοῦ τὸν υἱόν γὰρ ἤμελλεν ἀποθνήσκειν

47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்.
47 When he heard that Jesus had come from Judea to Galilee, he went and begged Him to come down and heal his son, who was about to die.
47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.

48οὖν ὁ Ἰησοῦς Εἶπεν πρὸς αὐτόν Ἐὰν μὴ ἴδητε σημεῖα καὶ τέρατα οὐ μὴ πιστεύσητε

48 அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.
48 Jesus said to him, “Unless you people see signs and wonders, you will never believe.”
48 இயேசு அவரை நோக்கி, "அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்." என்றார்.

49Κύριε ὁ βασιλικός Λέγει πρὸς αὐτὸν κατάβηθι πρὶν μου τὸ παιδίον ἀποθανεῖν

49 அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான்.
49 “Sir,” the official said, “come down before my child dies.”
49 அரச அலுவலர் இயேசுவிடம், "ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்" என்றார்.

50Πορεύου Λέγει ὁ Ἰησοῦς αὐτῷ σου ὁ υἱός ζῇ ὁ ἄνθρωπος Ἐπίστευσεν Ἰησοῦς τῷ λόγῳ ὃν ὁ εἶπεν αὐτῷ καὶ ἐπορεύετο

50 இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான்.
50 “Go,” said Jesus. “Your son will live.” The man took Jesus at His word and departed.
50 இயேசு அவரிடம், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.

51δὲ αὐτοῦ ἤδη καταβαίνοντος ‹αὐτοῦ› οἱ δοῦλοι ὑπήντησαν αὐτῷ λέγοντες ὅτι αὐτοῦ ὁ παῖς ζῇ

51 அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.
51 And while he was still on the way, his servants met him with the news that his boy was alive.
51 அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள்.

52οὖν Ἐπύθετο παρ’ αὐτῶν τὴν ὥραν ἐν ᾗ ἔσχεν κομψότερον οὖν εἶπαν αὐτῷ ὅτι ὁ πυρετός ἀφῆκεν αὐτὸν Ἐχθὲς ἑβδόμην ὥραν

52 அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள்.
52 So he inquired as to the hour when his son had recovered, and they told him, “The fever left him yesterday at the seventh hour.”e
52 "எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?" என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், "நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது" என்றார்கள்.

53οὖν ὁ πατὴρ Ἔγνω ὅτι [ἐν] ἐκείνῃ τῇ ὥρᾳ ἐν ᾗ ὁ Ἰησοῦς εἶπεν αὐτῷ σου Ὁ υἱός ζῇ καὶ αὐτὸς καὶ ὅλη αὐτοῦ ἡ οἰκία ἐπίστευσεν

53 உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்.
53 Then the father realized that this was the very hour in which Jesus had told him, “Your son will live.” And he and all his household believed.
53 'உம் மகன் பிழைத்துக் கொள்வான்' என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.

54Τοῦτο δὲ πάλιν δεύτερον σημεῖον ὁ Ἰησοῦς ἐποίησεν ἐλθὼν ἐκ τῆς Ἰουδαίας εἰς τὴν Γαλιλαίαν

54 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.
54 This was now the second sign that Jesus performed after coming from Judea into Galilee.
54 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

John Chapter    1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
1 a Literally When therefore Jesus knew that the Pharisees had heard that Jesus ; NE, WH, BYZ, and TR When therefore the Lord knew that the Pharisees had heard that Jesus
6 b That is, about noon
9 c Tischendorf does not include this sentence.
35 d Literally white
52 e That is, one in the afternoon

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.